தருமபுரி, ஜூலை 25- மருக்கம்பட்டி பங்காரு குழிக்காடு ஏரியை சேதப்படுத்தி யவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி அக்கிராம மக்கள் தருமபுரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். இதுகுறித்து அக்கிராம மக்கள் அளித்த கோரிக்கை மனுவில் தெரிவித்திருப்பதாவது, பென்னாகரம் வட்டம், மருக்கம்பட்டி பங்காரு குழிக்காடு என்ற இடத்தில் 100 குடும் பங்கள் வசித்து வருகின்றோம். இங்கு தமிழக அரசால் 1993-94 ஆண்டில் ஏரி கட்டப்பட்டது. இந்த ஏரியில் நீரை கிராம பொது மக்கள் 150 ஏக்கர் விவசாயத்திற்கும், ஆடு, மாடு நீர் தேவைக் காகவும் பயன்படுத்தி வந்தோம். இந்நிலையில், கடந்த ஜூலை 17 ஆம் தேதி இரவு நேரத்தில் எங்கள் ஊரை சேர்ந்த சிலர் ஏரியின் முகப்பை உடைத்துவிட் டார்கள். ஆதலால் ஏரி பலத்த சேதம் அடைந்துவிட்டது. ஏரி உடைந்த செய்தி தெரிந்து ஊர் பொதுமக்கள் ஒன்று சேர்ந்து எதற்கு ஏரியை உடைத்தீர்கள் என்று கேட்டபொழுது இந்த ஏரி எங்களுடைய பட்டாவில் உள்ளது. அதனால் நாங்கள் ஏரியை உடைத்தோம், நீங்கள் உரிமை கொண்டாட முடியாது.
இது எங்களுக்கு மட்டும் சொந்தம் என பிரச்சனை செய்து வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் இந்த ஏரியில் 100 நாள் வேலை திட்டத் தையும் செய்யவிடாமல் தடுத்து வருகின்றனர். மேலும், பல ஆண்டுகளுக்கு முன்பு ஊராட்சிமன்ற தலைவர் சார் பாக மக்களுக்கு ஆழ்துளை கிணறு ஒன்று அமைக்கப்பட்டது. அதிலும், அவர்களின் அராஜகத்தை பயன்படுத்தி வீட்டின் மின் இணைப்பில் மின்மோட்டர் பயன்படுத்தி மேற்கண்டவர் கள் மட்டும் நீரை பயன்படுத்தி வருகிறார்கள். எனவே, ஊர் பொதுமக்கள் ஒன்று சேர்ந்து பெரும்பாலை காவல் நிலையத் தில் இது குறித்து புகார் மனு அளித்தோம். இப்புகார் மனு ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதற்கு பிறகு மூன்று நாட்கள் கழித்து உடைந்த ஏரியின் முகப்பை இரவில் சிமெண்ட் இல்லாமல் கற்களை கொண்டு அடுக்கி மண் மூல மாக கட்டிவிட்டனர். அன்று இரவே மழை பெய்ததால் அந்த கட்டிடம் கரைந்துவிட்டது. அதிகாரிகள்ஆய்வு மேற்கொண்ட பொழுது இது எங்கள் பட்டா நிலத்தில் உள்ளது என்று அதிகாரி களிடம் அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த ஏரியை விவசாயிகளின் நலனை கருதி ஏரியை தூர்வாரி சேதமான ஏரியின் முகப்பை சீரமைத்து, விவசாய மக்களுக்கு தகுந்த பாதுகாப்பு கொடுக்குமாறும் ஏரியைமீட்டுதருமாறு தெரிவித் துள்ளனர்.