திருப்பூர், மே 2– கோடை வெயில் காரணமாக ஏற்பட்டுள்ள வறட்சியால் பயிர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. எனவே, அதிகாரிகள் ஆய்வு செய்து இழப்பீடு வழங்க வேண் டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. தமிழ்நாடு விவசாயிகள் சங்கத் தின் திருப்பூர் மாவட்டக்குழு கூட் டம் செவ்வாயன்று தாராபுரம் அலு வலகத்தில் மாவட்டத் தலைவர் எஸ்.ஆர்.மதுசூதனன் தலைமை யில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநிலத் துணைத்தலைவரும், முன் னாள் சட்டமன்ற உறுப்பினருமான பி.டில்லிபாபு கலந்து கொண்டார். இக்கூட்டத்தில் மாவட்டப் பொரு ளாளர் அ.பாலதண்டபாணி, மாவட்ட நிர்வாகிகள் எஸ்.பரமசி வம், எஸ்.கே.கொளந்தசாமி, தாரா புரம் தாலுகாச் செயலாளர் ஆர். வெங்கட்ராமன், உடுமலை ஒன்றி யத் தலைவர் ஏ.ராஜகோபால் உட் பட கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில், திருப்பூர் மாவட்டத்தில் பெரும்பான்மை யான பகுதிகளில் நீண்ட காலப் பயி ரான தென்னை பயிரிடப்பட்டுள் ளது. தற்போது ஏற்பட்டுள்ள கடும் வறட்சியினால் தென்னை மரங்கள் காய்ந்து கருகி வருகின்றன. தோட்டக்கலைத்துறையில் பாதிக் கப்பட்ட தென்னை மரங்களை உடனே ஆய்வு செய்து, மாநில அரசு பாதிக்கப்பட்ட தென்னை விவசாயி களுக்கு இழப்பீடு வழங்க வேண் டும். அத்துடன் நமது மாவட்டத்தில் வெங்காயம் உள்ளிட்ட காய்கறி பயிர்களும், மக்காச்சோளம் மற் றும் தீவனப் பயிர்களும் வறட்சி யால் கடுமையான பாதிப்பு அடைந்து காய்ந்துவிட்டது. அனைத்து பயிர்கள் குறித்தும் ஆய்வு நடத்தி உரிய இழப்பீடு வழங்க வேண்டும். அவிநாசி வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் சமீப காலமாக மும் முனை மின்சாரம் வழங்கப்படுவ தில்லை. அப்படியே வழங்கினா லும் ஒரு சில மணி நேரங்கள் மட் டுமே வழங்கப்பட்டு பின்பு தடை செய்யப்படுகிறது. இந்த நிலை நீடித்தால் பயிர்கள் அனைத்தும் கருகி விவசாயிகள் நஷ்டம் அடை யும் நிலை ஏற்படும். ஆகவே மேற் கண்ட பகுதியில் மும்முனை மின்சா ரம் சீராக தேவையான அளவு வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். திருப்பூர் மாவட்டம், உடும லைப்பேட்டை வனத்துறை மலை வாழ் மக்கள் சங்க தலைவர்கள், உள்ளிட்ட10-க்கும் மேற்பட்ட வர்கள் மீது வழக்கு பதிவு செய்து, ஒரு கட்டிட தொழிலாளியை சிறை யில் அடைத்துள்ளனர். வனத்துறை யின் இந்த மக்கள் விரோத போக்கை தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டக் குழு வன்மையாக கண்டிக்கிறது. மக்கள் மீது போடப் பட்ட வழக்கை திரும்பப்பெற வேண்டுமென தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. தருமபுரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத் தின் தருமபுரி மாவட்டக்குழு கூட் டம், மாவட்டத் தலைவர் எம்.குமார் தலைமையில் முத்து நினைவு அறக் கட்டளை அலுவலகத்தில் செவ்வா யன்று நடைபெற்றது. இக்கூட்டத் தில், தருமபுரி மாவட்டத்தில் கோடை வெயில் என்றும் இல்லாத அளவு அதிகமாக உள்ளது; வர லாறு காணாத அளவிற்கு வறட்சி ஏற்பட்டுள்ளது. மாவட்டத்தில் 80 சதவிகிதமான நீர் நிலைகள் வறண் டுவிட்டன. விவசாயிகள் பயிரிட்ட பயிர்கள் கருகிவிட்டன. மாவட்டம் முழுவதும் கடுமையான குடிநீர் பற்றாக்குறை ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது. எனவே, மாவட்ட நிர்வாகம் தருமபுரியை வறட்சி பாதித்த மாவட்டமாக அறி வித்து, போர்க்கால அடிப்படை யில் நடவடிக்கை எடுக்க வேண்டும். பயிர்வாரி கணக்கெடுப்பு நடத்தப் பட்டு விவசாயிகளுக்கு உரிய நிவா ரணம் வழங்க வேண்டும். விவசா யிகள் பெற்றுள்ள கூட்டுறவு கடன் களை தள்ளுபடி செய்ய வேண்டும். தீவனம் இல்லாமல் அவதிப்படும் கால்நடைகளுக்கு மானிய விலை யில் தீவனம் வழங்க வேண்டும். மலைப்பகுதிகளில் உள்ள கிராமங் களில் கால்நடைகளுக்கு கோமாரி போன்ற பல்வேறு நோய்கள் ஏற் பட்டு வருகிறது. எனவே, நடமா டும் மருத்துவக் குழுவை அனுப்பி சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. இக்கூட்டத்தில் சங்கத்தின் விவ சாயிகள் சங்க மாநிலப் பொருளா ளர் கே.பி.பெருமாள், மாவட்டச் செயலாளர் சோ.அருச்சுனன், மூத்த தலைவர்கள் பி.இளம்பிறை, பி.இளம்பரிதி, மாவட்ட துணைத்த லைவர்கள், துணைச்செயலாளர் கள், மாவட்டக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். முடிவில், மாவட்டப் பொருளாளர் சி.வஞ்சி நன்றி கூறினார்.