உதகை, ஜூன் 9- நீலகிரி மாவட்டத்தில் பெய்த கனமழை யால் நூறு ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த கேரட் சேதமடைந்தது. இதனால் அப்பகுதி விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் தேயிலை சாகு படிக்கு அடுத்தப்படியாக கேரட், பீட்ரூட் உள்ளிட்ட மலை காய்கறிகள் சாகுபடி செய் யப்படுகிறது. 5 ஆயிரம் ஹெக்டேருக்கு அதி கமான பரப்பளவில் மாவட்டத்தில் காய்கறி பயிர்களான உருளைக்கிழங்கு, கேரட், முட்டைக்கோஸ், பீட்ரூட், பூண்டு போன்ற பயிர்களும், கூடலூர் பகுதியில் இஞ்சி, வாழை மற்றும் மரவள்ளி பயிர்களும் பயிரி டப்பட்டு வருகிறது. இதில், உதகை சுற்று வட்டார பகுதிகளான கேத்தி, எம்பாலாடா மற்றும் கோத்தகிரி உள்ளிட்ட இடங்களில் கேரட் உள்ளிட்ட காய்கறிகள் அதிகளவில் பயிரிடப்பட்டுள்ளன. இந்நிலையில், நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக அதிகப் படியான மழை பெய்து வருகிறது. இத னால் கேரட் பயிர்கள் தண்ணீரில் மூழ்கி சேத மாகின. இதனால் விவசாயிகள் மிகுந்த கவலை அடைந்துள்ளனர். மேலும், மழை யால் நிலத்தில் சூடு அதிகமாகி கேரட் அழுகி விட்டதாக விவசாயிகள் வேதனை தெரிவித் துள்ளனர். எனவே, மழையால் அழுகி சேதமான கேரட்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் வலி யுறுத்தியுள்ளனர். இதுகுறித்து தோட்டக் கலைத்துறை அதிகாரிகள் கூறுகையில், கனமழையால் 100 ஏக்கர் பரப்பளவில் பயிரி டப்பட்டிருந்த கேரட் பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது சற்று மழை குறைந்துள்ளதால் இறுதிக்கட்ட கணக்கெடுப்பு நடத்தி அதன் அடிப்படையில் மாவட்ட ஆட்சியரிடம் றிக்கை தாக்கல் செய்யப்படும், என்றனர்.