தருமபுரி, செப்.2- கனமழையால் 50 ஏக்கர் பரப்பள வில் உள்ள நெல் பயிர் சேதமடைந் துள்ளதால், விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத் தப்பட்டுள்ளது. தருமபுரி மாவட்டத்தில் தொடர்ந்து மூன்று நாட்களாக கன மழை பெய்து வருகிறது குறிப்பாக இரவு நேரங் களில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இந்த மழையால் தருமபுரி மாவட்டத்தில் பெரும்பாலான ஏரி, குளங்கள் நிறைந்து வருகின்றன. தருமபுரி ஒன்றியத்திற்கு உட்பட்ட பிடமனேரி ஏரி இரண்டு நாட்களாக பெய்து வரும் கனமழையால் நிறைந்து உபரி நீர் வெளியேறி வருகிறது. இதேபோல் கடந்த கடந்த காலங் களில் பெய்த மழையால் ஏரி நிறைந்து ஏரியில் இருந்து வெளியேறும் உபரி நீர் கால்வாய் ஆக்கிரமிப்பால் விவ சாய நிலங்களுக்குள் தண்ணீர் புகுந்து பயிர்கள் நாசமானது. மாவட்ட நிர்வாகம் உத்தரவின் பெயரில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உபரி நீர் வெளி யேறுவதற்கு கால்வாய் அமைத்தனர். மேலும், உபரி நீர் கால்வாயை சிமெண்ட் கால்வாயாக மாற்றி அமைக்க விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். இதுவரை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ளாததால் உபரி நீர் கால்வாய்கள் மண் சரிந்து ஆங்காங்கே மழை நீர் செல்வதற்கு வழியின்றி தடைபட்டுள்ளதால் மழை நீரானது தற்பொழுது பிடமனேரி பகுதி யில் உள்ள விவசாய நிலங்களில் புகுந்து பயிர்கள் நாசமாகி உள்ளது. மேலும் அப்பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதிகள் தொழிற்சாலை களுக்குள்ளும் மழை நீர் புகுந்துள் ளது. மேலும், ஏரியிலிருந்து ஜிலேபி, கட்லா, ரோகு, பொட்லா, உள்ளிட்ட பல வகையான மீன்கள் ஏரியின் உபரி நீர் செல்லும் வழியாக வெளியேறி வயல்களில் புகுந்ததால் இரண்டு நாட் களாக பொதுமக்கள் அரை கிலோ முதல் நான்கு கிலோ எடையுள்ள மீன் களை பிடித்து வருகின்றனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறு கையில், மூன்று நாட்களாக பெய்து வரும் தொடர் மழையால் 40 ஏக்கர் பரப்பளவில் உள்ள பிடமனேரி ஏரிக்கு நீர்வரத்து அதிகரிப்பால் ஏரி நிறைந்து இரண்டு நாட்களாக உபரி நீர் ஏரி வழியாக வெளியேறி வருகிறது. கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜேசிபி எந்திரம் மூலம் தற்காலிக மாக ஆக்கிரமிப்புகளை அகற்றி உபரி நீர் கால்வாயை தூர்வாரி உபரி நீர் செல்வதற்கு வழிவகை செய்யப் பட்டது. இந்த கால்வாய் வழியாக ஏரி யின் உபரி நீர் நிரந்தரமாக வெளியேறு வதற்கு கால் வாயை சிமெண்ட் கால்வாயாக மாற்றி அமைக்க வேண்டும் என்று வட்டார வளர்ச்சி அலுவலகத்திலும் மாவட்ட நிர்வா கத்திடமும் மனு கொடுத்து முறை யிட்டும் இதுவரை எந்த நடவடிக்கை யும் எடுக்கவில்லை. பருவமழை காலங் களில் ஏரிக்கு மழை நீர் வரத்து அதிகரிப்பால் உபரி நீர் வெளியேறி விவ சாய நிலங்கள் குடியிருப்பு பகுதிகள் தொழிற்சாலைகள் அனைத்திலும் உபரி நீர் புகுந்து சேதத்தை ஏற்படுத்தி வருகிறது. பிடமனேரி ஏரிக்கு கீழ் பகுதியில் 50க்கும் மேற்பட்ட ஏக்கரில் விவசாயிகள் ஏக்கருக்கு 40,000 செலவு செய்து நெல் பயிர் நடவு செய்துள் ளனர். தற்பொழுது ஏரியிலிருந்து வெளியேறும் உபரி நீரால் நெற்பயிர் கள் தண்ணீர் நிறைந்து நாசமாகி உள்ளது. மாவட்ட நிர்வாகம் உடனடி யாக ஹிட்டாச்சி மூலம் உபரி நீர் கால்வாயை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் மேலும் விவசாயி களுக்கு இழப்பீடாக நிவாரணம் வழங்க வேண்டும் என்றனர்.