உடுமலை, ஏப்.18- உடுமலை பிஏபி (பரம்பிக்குளம் ஆழி யாறு பாசனம்) திட்டம், திருமூர்த்தி அணை பாசன சபையின் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். நீர்பாசன அமைப்பு முறை மேலாண்மை சட்டத்தின் கீழ் பிஏபி (பரம்பிக்குளம் ஆழி யாறு பாசனம்) பாசனத் திட்டம் மற்றும் அம ராவதி பாசனத் திட்டங்களில் உள்ள கிராம நீரினைப் பயன்படுத்துவோர் சங்க தலைவர் மற்றும் ஆட்சி மண்டல தொகுதி உறுப்பினர் களை அத்திட்டத்தில் உள்ள விவசாயிகள் நேரடியாக தேர்வு செய்ய வேண்டும் என விதி உள்ளது. அதன்படி, கிராம நீரினை பயன்படுத்துவோர் சங்கத்தலைவர் மற்றும் ஆட்சி மண்டல தொகுதி உறுப்பினர்கள் தேர்வு செய்த பின், பகிர்மானக்குழு தலை வர்களை தேர்வு செய்ய வேண்டும். பகிர்மா னக்குழு தலைவர்களில் ஒருவரை திட்டக் குழு தலைவராக தேர்வு செய்யப்படுவர். தேர்ந்தெடுக்கப்பட்ட பாசன சபையினர், நீர் நிர்வாகம், கால்வாய் பராமரிப்பு உள்ளிட்ட பணிகளில் ஈடுபடுவர். இப்பதவிகளுக்கு கடந்த 2009 ஆம் ஆண்டு தேர்தல் நடை பெற்றது. கடந்த 2014 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதியுடன் பதவிகாலம் முடிவுற் றது. ஆனால், அதன்பிறகு கடந்த 8 ஆண்டுக ளாக தேர்தல் நடத்தப்படவில்லை. இந்நிலையில், அண்மையில் பாசன சபையின் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுப் பதற்கான தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதன்படி, பிஏபி பாசனம் திருமூர்த்தி அணை திட்டத்தில் உடுமலை தாலுகாவில் 36 சங்கம், 234 ஆட்சி மண்டல தொகுதிக்கு வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தி லும், 3 சங்கம், 14 ஆட்சி மண்டல தொகுதிக்கு மடத்துக்குளம் தாலுகா அலுவலகத்திலும் வேட்புமனு தாக்கல் நடைபெற்றது. இதே போல், அமராவதி பாசனத் திட்டத்திற்கு 22 சங்கங்கள், 88 ஆட்சி மண்டல தொகுதி உறுப் பினர்களுக்கு மனுத்தாக்கல் மடத்துக் குளம் தாலுகா அலுவலகத்திலும் நடைபெற் றது. பாசன சங்கத் தலைவர், ஆட்சி மண்ட லத் தொகுதி உறுப்பினர் தேர்தலுக்கு வேட்பு மனு ஏப்ரல் 4 ஆம் தேதி பெறப்பட்டது. வேட்பு மனு பரிசீலனை ஏப்ரல் 8 ஆம் தேதியும், போட்டியிருந்தால் வரும் ஏப்ரல் 17 ஆம் தேதி காலை 7 மணிக்கு தேர்தல் நடை பெறும் எனவும், ஓட்டு எண்ணிக்கை மாலை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
பாசன சங்க நிர்வாகிகள் தேர்தல் நடத் தும் அலுவலர்களாக வருவாய் கோட்டாட்சி யர், துணை மாவட்ட ஆட்சியர்களும், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களாக வட்டாட் சியர் நிலையிலான அதிகாரிகளும் நியமிக் கப்பட்டிருந்தனர். வேட்புமனு பரீசிலனை மற்றும் வாபஸ் பெற்ற பிறகு, உடுமலை திரு மூர்த்தி கோட்டத்தில் உள்ள கண்ணமநாயக் கனூர், கோட்டமங்கலம், பூளவாடி, முக்கூடு ஜல்லிபட்டி, பூலாங்கிணறு, விருகல்பட்டி, சோமாவாரபட்டி ஆகிய 7 கிராம நீரினைப் பயன்படுத்துவோர் சங்கத் தலைவர் பதவிக் கும், 8 ஆட்சி மண்டலத் தொகுதி உறுப்பினர் பதவிகளுக்கும் தேர்தல் நடைபெற்றது. இதில் கிராம நீரினைப் பயன்படுத்து வோர் சங்கத் தலைவராக கண்ணமநாயக் கனூர் செந்தில்வேல், கோட்டமங்கலம் ரவி, பூளவாடி குணசேகரன், முக்கூடு ஜல்லிபட்டி மோகன்ராஜ், பூலாங்கிணறு ஜெயபால், விருகல்பட்டி சுரேஸ், சோமவாரபட்டி பொன்னுச்சாமி ஆகியோர் வெற்றி பெற் றனர். மேலும், ஆட்சி மண்டலக் குழு உறுப்பி னர்களுக்கு நடைபெற்ற தேர்தலில், கண்ண மநாயக்கனூர் உறுப்பினர் எண் 4-ல் ஈஸ்வ ரன், பூளவாடி உறுப்பினர் எண் 2-ல் சிவக் குமார், உறுப்பினர் எண் 3-ல் ஈஸ்வரன், முக்கூடு ஜல்லிபட்டி உறுப்பினர் எண் 4-ல் ராமசாமி, பூலாங்கிணறு உறுப்பினர் எண் 4-ல் லோகநாதன், விருகல்பட்டி உறுப்பினர் எண் 1-ல் ஶ்ரீனிவாசன், சோமவாரபட்டி உறுப் பினர் எண் 1-ல் பிரபு, உறுப்பினர் எண் 5-ல் சரவணன் ஆகியோர் வெற்றி பெற்றனர்.