திருப்பூர், செப். 19 – திருப்பூர் மாவட்டம், தாராபுரம் வட்டம் நந்தவனம்பாளையம் ஊராட்சி யில் ஒரு தலித் குடும்பத்தை கடந்த ஐந்து மாதங்களாக ஊரை விட்டு ஒதுக்கி வைத்திருப்பதாக கூறப்படும் குற்றச் சாட்டு குறித்து தேசிய தாழ்த்தப்பட் டோர் ஆணையம் திருப்பூர் மாவட்ட காவல் துறைக்கு நோட்டீஸ் அனுப்பி யுள்ளது. அதேநேரத்தில், அந்த கிரா மத்தைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட மக்கள், இந்த புகார் உண்மைக்குப் புறம்பானது என மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித் துள்ளனர். தாராபுரம் வட்டம், குண்டடம் ஒன் றியம் நந்தவனம்பாளையம் கிராம ஊராட்சிக்கு உட்பட்டது ஓலப் பாளையம் கிராமம். இங்குள்ள அருந் ததியர் தெருவில் வசித்து வந்தவர் பிரபு (33). இவர் உள்ளூரில் விவசாயக் கூலி வேலைக்குச் செல்லாமல் தினக்கூலி வேலை செய்யக்கூடியவராக இருந்தி ருக்கிறார். இது உள்ளூரைச் சேர்ந்த சாதி ஆதிக்க மனம் கொண்ட சிலருக்கு பிடிக்கவில்லை. இந்நிலையில், கடந்த ஏப்ரல் 18ஆம் தேதி ஊர் மாரியம்மன் கோயில் திருவிழாவில் பறையடிப்ப தற்கு இவரது நண்பர் சீனிவாசன் அழைத்திருக்கிறார். அங்கு செல்ல இவருக்கு காலதாமதம் ஆகிவிட்டது. எனவே, மறுநாள் அதே ஊரில் ஒதுக் குப்புறமான இடத்தில் உள்ளூர் விவ சாய சமூகத்தைச் சேர்ந்த பால கிருஷ்ணன் என்பவர் முன்னிலையில் சீனிவாசன், அவரது தந்தை கிருஷ்ண மூர்த்தி, தாய் பழனியம்மாள் ஆகியோர் பிரபுவின் தந்தை செல்வராஜ், தாய் பூவாத்தாள் ஆகியோரை தாக்கியுள்ள தாக கூறப்படுகிறது. இவர்களுக்கு அறி முகமான பாலகிருஷ்ணனிடம் ஏன் சீனிவாசன் குடும்பத்தார் தாக்கியபோது தடுக்க முன்வரவில்லை என்று பிரபு கேட்டிருக்கிறார். இதையடுத்து பால கிருஷ்ணன் பிரபு குடும்பத்தினரை சாதியைச் சொல்லி இழிவுபடுத்தி திட்டியதாகக் கூறப்படுகிறது. பால கிருஷ்ணனின் விவசாய நிலத்தில் வேலை செய்ய மறுத்ததால்தான் அவர் தூண்டிவிட்டு தாக்குதல் நடத்தியதாக பிரபு தெரிவித்தார். இந்த சம்பவம் தொடர்பாக குண்டடம் காவல் நிலையத்தில் பிரபு புகார் கொடுத்தும் காவல் துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை. இந்நிலை யில் பாலகிருஷ்ணன் சார்ந்த சாதியினர் பிரபுவிடம், காவல் நிலையத்தில் கொடுத்த வழக்கை வாபஸ் பெற வேண்டும் என்று வற்புறுத்தியுள்ளனர். அதற்கு பிரபு மறுப்புத் தெரிவித்து விட்டார். ஊர்க்காரர்களைப் பகைத்துக் கொண்டால் அதற்கு பிறகு நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள் என்று அவர் கள் மறைமுகமாக மிரட்டியுள்ளனர். இந்த சூழ்நிலையில் கடந்த ஐந்து மாத காலமாக ஊருக்குள் போக முடி யாமல் பிரபு அவரது அப்பா, அம்மா ஆகியோர் வேறு இடத்தில் தங்கி யுள்ளனர். காவல் துறையும் நடவ டிக்கை எடுக்காத நிலையில், ஊருக்குள் செல்ல முடியாத பிரபு தேசிய தாழ்த்தப் பட்டோர் ஆணையத்திற்கு புகார் அனுப்பியுள்ளார். இதன் மீது விசாரித்து விளக்கம் அளிக்கும்படி தேசிய தாழ்த் தப்பட்டோர் ஆணையம் திருப்பூர் மாவட்ட காவல் துறைக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்த பின்னணியில் செவ்வாயன்று ஓலப்பாளையம் அருந்ததியர் தெருவைச் சேர்ந்த பொது மக்கள் திருப்பூர் மாவட்ட ஆட்சியரகத்திற்கு வந்து மனு அளித்தனர். இதில் பிரபுவின் குற்றச்சாட்டில் உண்மையில்லை என்று மறுப்புத் தெரிவித்துள்ளனர். எனினும் உள்ளூரைச் சேர்ந்த சாதி ஆதிக்கவாதிகளின் தூண்டுதலின் பேரில்தான் ஊர் மக்கள் இந்த மனுவை அளித்ததாக பிரபு கூறினார். மேலும் பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் தன் னிடம் அலைபேசியில் மிரட்டியதன் பதிவு தன்னிடம் இருப்பதையும் அவர் தெரிவித்தார். இந்த சம்பவம் குறித்து குண்டடம் காவல் துறையினர் விசா ரணை மேற்கொண்டுள்ளனர்.