districts

தினமும் ரூ.5 ஆயிரம் இழப்பீடு: நீதிமன்றம் நூதன தண்டனை

நாமக்கல், மே 9- ஆவணங்களை தவறவிட்ட  வங்கி நிர்வாகம், பாதிக்கப்பட்ட வருக்கு தினமும் ரூ.5 ஆயிரம் இழப் பீடு வழங்க வேண்டும் என நாமக் கல் நுகர்வோர் நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது. கோவை மாவட்டம், பொள் ளாச்சி அருகே உள்ள ஆனைம லையைச் சேர்ந்த வி.நாகப்பன் என் பவர், கடந்த 2017 ஆம் ஆண்டு,  தமக்கு சொந்தமான நில ஆவணங் களை உடுமலைப்பேட்டையில் உள்ள குரு பைனான்ஸில் அடமா னம் வைத்து, ரூ.20 லட்சம் கடன் பெற்றுள்ளார். நாகப்பன் கடன் பெற்ற சிறிது காலத்துக்குப்பிறகு குரு பைனான்ஸ் நிறுவனம் பந்தன்  வங்கியுடன் இணைக்கப்பட்டுவிட் டது. கடன் பெற்ற முதியோருக்கு உடல் நலப் பிரச்சனை ஏற்பட்டு, மருத்துவச் செலவிற்காக சொத்தை விற்க முடிவு செய்து வங் கியை அணுகி, பணத்தை செலுத்த தயாராக இருப்பதாகவும், ஆவ ணங்களை தருமாறும் கேட்டுள் ளார். அப்போது ஆவணங்கள்  காணாமல் போய்விட்டன என்பது அவருக்கு தெரிய வந்துள்ளது. இதுகுறித்து தொடரப்பட்ட வழக் கில் நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்ற நீதிபதி வீ.ராமராஜ் தலை மையிலான அமர்வு தீர்ப்பு வழங்கி யது. அதில் பாதிக்கப்பட்ட முதியவ ருக்கு வங்கி நிர்வாகம் நான்கு வார  காலத்துக்குள் காவல் நிலையத் தில் பெற்ற ஆவணங்களை கண்டு பிடிக்க இயலவில்லை என்ற சான்றி தழையும், பதிவாளர் அலுவலகத் தில் பெற்ற ஆவணங்களின் நகல்க ளையும் வழங்க வேண்டும். தவறி னால் காலதாமதம் செய்யும் ஒவ் வொரு நாளுக்கும் ரூ.5 ஆயிரம்  இழப்பீட்டை வாடிக்கையாளருக்கு வங்கி நிர்வாகம் வழங்க வேண் டும் என்றும், பாதிக்கப்பட்ட முதிய வருக்கு நான்கு வார காலத்துக்குள்  ரூ.10 லட்சம் இழப்பீடாக வழங்க வும் உத்தரவிட்டுள்ளது. கணவரை இழந்த பெண்ணுக்கு  இழப்பீடு கோவை மாவட்டம், சர்க்கார்  சாமக்குளம் பகுதியைச் சேர்ந்த சசிகு மார் என்பவரின் மனைவி எஸ்.ஜோதிமணி (42). இவரும், இவரது  கணவரும் கடந்த 2019 ஆம் ஆண்டு  குன்னத்தூரில் உள்ள சிட்டி யூனி யன் வங்கியில் கடன் பெற்றுள்ள னர். அப்போது வங்கியின் பரிந்து ரையின்படி, பஜாஜ் அலையன்ஸ் லைப் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் ரூ.10,122 பிரிமியம் செலுத்தி கட னுக்கு இன்சூரன்ஸ் செய்துள்ள னர். திடீரென கணவர் இறந்து விட் டதால், இன்சூரன்ஸ் பணத்தை  கேட்ட போது, ஏற்கனவே இறந்தவ ருக்கு நோய் இருந்ததை மறைத்து இன்சூரன்ஸ் பாலிசி பெற்று இருப் பதால் பணம் கொடுக்க முடியாது  என இன்சூரன்ஸ் நிறுவனம் தெரி வித்துள்ளது. இதுகுறித்து தொட ரப்பட்ட வழக்கில், இன்சூரன்ஸ் நிறு வனம் ஜோதிமணிக்கு காப்பீட்டுத் தொகை ரூ.9 லட்சத்தையும், இழப் பீடாக ரூ.ஒரு லட்சத்தையும் நான்கு  வார காலத்திற்குள் வழங்க வேண் டும் என நாமக்கல் நுகர்வோர் நீதி மன்ற நீதிபதி வீ.ராமராஜ் உத்தர விட்டுள்ளார். ரெடி மிக்ஸ் கான்கிரீட் கோவை மாவட்டம், கவுண்டம் பாளையத்தைச் சேர்ந்த ஓய்வு  பெற்ற பேராசிரியர் நாகேந்திரன் (66) என்பவர், வீடு கட்டுவதற்காக  அல்ட்ராடெக் ரெடி மிக்ஸ் கான்கிரீட்  நிறுவனத்தில் கடந்த 2022 ஆம் ஆண்டு வாங்கிய கான்கிரீட் கலவை குறைபாடு உடையதாக இருந்தது என்று வழக்கு தாக்கல்  செய்திருந்தார். இந்த வழக்கை  விசாரித்த நாமக்கல் மாவட்ட நுகர் வோர் நீதிமன்ற நீதிபதி வீ.ராம ராஜ், வேவை குறைபாட்டிற்காக அல்ட்ராடெக் சிமெண்ட் நிறுவனம்  நான்கு வார காலத்திற்குள் ரூ.3  லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.