districts

சைபர் பள்ளிக்கூடம்: புதிய திட்டம் தொடக்கம்

உதகை, ஜன.25- நீலகிரியில் ஆன்லைன் மோசடி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், சைபர் பள்ளிக்கூடம் என்ற  புதிய  திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. கணினி அல்லது இணைய சேவை மூலம் நடைபெறும் குற்றங்கள் அனைத் தும் சைபர் குற்றங்களாகும். ஆரம்பத் தில் வங்கியில் இருந்து பேசுவதாகவும், ஓ.டி.பி. எண்ணை தெரிவிக்குமாறும் கூறி மோசடி செய்தனர். தற்போது புதிய,  புதிதாக மோசடிகளை அரங்கேற்றி வரு கின்றனர். இந்நிலையில், சைபர் குற்ற  வழக்கு விசாரணையில் நாடு முழுவதும் ஒருங்கிணைப்பு தேவை என்பதற்காக இந்தியா 8 மண்டலங்களாக பிரிக்கப் பட்டு உள்ளது. இதில் தமிழ்நாடு, கேர ளம், கர்நாடகா ஆகியவை தென் மண்ட லத்தில் உள்ளது. இதேபோல் சைபர் குற்றங்கள் குறித்து மாணவ-மாணவிக ளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகை யில் சைபர் கிளப் தொடங்க அறிவுறுத்தி யது. அதன்படி நீலகிரி மாவட்டத்தில்  பள்ளி, கல்லூரிகளில் சைபர் கிளப்  தொடங்கப்பட்டு மாணவர்களுக்கு விழிப் புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. வாட்ஸ்-அப் குழு தொடங்கப்பட்டு, அதில் ஆன்லைன் மோசடி குறித்து தகவல்கள் அனுப்பி விழிப்புணர்வு ஏற்ப டுத்தப்படுகிறது. இருப்பினும், குற்ற சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. எனவே நீலகிரியில் தற்போது புதிதாக சைபர் பள்ளிக்கூடம் என்ற புதிய திட் டம் தொடங்கப்பட்டுள்ளது. இதன்படி ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை மாலை 4 மணி முதல் 5 மணி வரை  முகநூல் நேரலை நிகழ்ச்சி மூலம்  சைபர் கிரைம் குறித்து ஒவ்வொரு  வாரமும் துறை வல்லுநர்கள் பொது மக்களுக்கு விளக்கம் அளிப்பார்கள். அப்போது பொதுமக்கள் கேட்கும் சந் தேகங்களுக்கும் விளக்கம் அளிக்கப் படும். இதுகுறித்து நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா கூறியதா வது, நீலகிரி மாவட்ட சைபர் கிரைம்  துறை சார்பில் இந்த திட்டம் செயல் படுத்தப்படுகிறது. பள்ளி கல்லூரி மாணவ - மாணவிகள் மற்றும் வேலை பார்ப்பவர்கள் தங்களுக்கு எந்த சந்தே கம் என்றாலும் இதில் தொடர்பு கொள் ளலாம். சமூக வலைதளங்களில் தனிப் பட்ட தகவல்களை பகிர வேண்டாம். ஓடிபி உள்ளிட்ட தகவல்களை யாருக் கும் சொல்ல வேண்டாம். அறிமுகம் இல் லாத நபர்களிடம் வீடியோ கால் பேச வேண்டாம். சமீபகாலமாக டிஜிட்டல் கைது என்று கூறி வங்கி கணக்கில் உள்ள பணத்தை மோசடி ஆசாமிகள் தங்க ளுடைய வங்கி கணக்குக்கு மாற்றி ஏமாற்றுகின்றனர். டிஜிட்டல் கைது என்று கூறி போலீசார் ஒருபோதும் இந்த வகையில் தொடர்பு கொள்ள மாட்டார்கள். மேலும் சைபர் குற்றங்கள் மூலம் பணம் இழப்பு ஏற்பட்டால் சைபர் கிரைம் உதவி எண் 1930 மற்றும் வலை தள முகவரி https://cybercrime.gov.in யில் உடனடியாக புகார் அளிக்க வேண் டும், என்றார். அப்போது அவருடன் கூடு தல் காவல் கண்காணிப்பாளர் மணி கண்டன், துணை காவல் கண்காணிப் பாளர் நவீன், சிறப்பு பிரிவு ஆய்வாளர் சுஜாதா உள்பட பலர் இருந்தனர்.