districts

img

தனியார் கல்குவாரியால் விளை நிலங்கள், வீடுகள் பாதிப்பு

தருமபுரி, செப்.28- நல்லம்பள்ளி அருகே செயல்படும் தனி யார் கல்குவாரியால் வீடுகள், விளை நிலங் கள் பாதிக்கப்பட்டு வருவதாக அப்பகுதி பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டத் திற்குட்பட்டது எர்ரபையனஅள்ளி ஊராட்சி. இந்த ஊராட்சிக்குட்பட்ட சந்தாரப்பட்டி கிரா மத்தில் தனியார் கல்குவாரி ஒன்று பல ஆண்டு களாக செயல்பட்டு வருகிறது. இந்த கல்குவா ரியை சுற்றிலும் பல ஏக்கர் விளை நிலங்கள்  மற்றும் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இந்நிலையில், இந்த கல்குவாரியில் அரசு அனுமதித்த அளவைவிட அதிகமாக, தரை  மட்டத்திலிருந்து பல நூறு அடி வரை கனி மம் தொடர்ந்து, இரவு, பகலாக வெடி வைத்து  வெட்டி எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், பாறைகளை உடைப்பதற்கு வெடி வைக்கப் படுவதால் விளை நிலங்கள் முழுவதும் கற் கள் சிதறி கிடக்கின்றன. இதனால் விவசாய பணி செய்ய முடியாமல், விவசாய தொழி லுக்கு செல்லும் பணியாளர்களுக்கு காயம் ஏற்படுகிறது. மேலும், நீர்வழிப்பாதையும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதால், மழை நீரும் தனியார் குல்வாரி பகுதியில் நிரம்புகிறது. இதனால் விவசாய கிணறுகளில் நீர்மட்டமும், நிலத்தடி நீர்மட்டம் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே  செல்வதால் விவசாய தொழில் முற்றிலும் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும்,  கல்குவாரியில் தொடர்ந்து வெடி வைக்கப் படுகிறது. இதனால் வீடுகளில் விரிசல் ஏற் பட்டு, எப்போது இடிந்து விழுமோ என்ற அச்ச நிலையில் பொதுமக்கள் வாழ்ந்து வருகின்ற னர். குடியிருப்பு மக்களுக்கும், விவசாய தொழில் பாதிப்பு ஏற்படும் வகையில் செயல் படும் கல்குவாரியை மூட வேண்டும் என வலி யுறுத்தி அப்பகுதி மக்கள் அதிகாரிகளிடம் பல முறை கோரிக்கை விடுத்தும், இதுவரை எவ் வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.  இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த விவ சாயி நடேசன் என்பவர் கூறுகையில், நாங் கள் காலகாலமாக இப்பகுதியில் தான் குடியி ருந்து வருகிறோம். அப்போதைய காலகட் டத்தில் இருந்து விவசாயம் மட்டுமே எங்களது பிரதான தொழிலாக இருந்து வருகிறது. சுற்று வட்டார பகுதியில் முழுவதும் கிணற்று நீர் பாச னம் மற்றும் ஆழ்துளை கிணறுகள் பாச னத்தை நம்பி இருக்கிறோம்.

இந்நிலையில் இப்பகுதியில் செயல்படும் கல்குவாரியா னது அரசு நிர்ணயித்த அளவைவிட அதிகள வில் கற்களை வெடி வைத்து பல ஆண்டுக ளாக வெட்டி எடுப்பதால், நிலத்தடி நீர்மட்டமா னது இப்பகுதியில் அதளபாதாளத்திற்கு சென்று விட்டது. இதனால் விவசாயம் செய்ய முடியாமல் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் கல்குவாரியில் வைக் கப்படும் வெடியால், அருகில் உள்ள குடியி ருப்புகள் மற்றும் விவசாய நிலங்களில் கற் கள் சிதறி விழுகின்றன இதனால் ஆடு, மாடு போன்ற கால்நடைகள், மனிதர்களின் உயி ருக்கு ஆபத்தான நிலை உள்ளது. தொடர் அதிர்வினால் வீடுகளில் விரிசல்கள் ஏற்பட்டு,  கற்கள் வீடுகள் மேல் விழுவதால் பெரும் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. அதுமட்டுமல்லாமல் கல்குவாரி நிறுவன மானது இப்பகுதியில் உள்ள நீரோடைகளை யும், ஆக்கிரமித்து கற்களை வெட்டி எடுத்து சாலைகள் அமைத்து போக்குவரத்திற்காக அமைத்துள்ளனர். இதுகுறித்து பலமுறை மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளித்தும், இது வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்க வில்லை. இதனால் இப்பகுதியிலிருந்து எங் கள் கிராமமே வெளியேறும் நிலைக்கு தள் ளப்பட்டுள்ளது. இதுகுறித்து சம்மந்தப்பட்ட கல்குவாரி உரிமையாளர்களிடம் கேட்டால், நேரடியாக மிரட்டல் விடுப்பதுடன், ஆட்கள் கொண்டு அடிக்க வருகிறார்கள். எனவே, தமிழ்நாடு அரசு உரிய கவனம் செலுத்தி, அரசு விதிமுறை மீறி செயல்படும் கல்குவா ரியை தடை செய்து, விவசாய தொழிலையும், நிலத்தடி நீர்மட்டத்தை பாதுகாக்க, நடவ டிக்கை எடுக்க வேண்டும், என வலியுறுத்தி யுள்ளார்.