districts

img

விவசாயிகள் போராட்டம் வெற்றி அனைவருக்கும் பயிர்க்கடன் தள்ளுபடி

உடுமலை, ஜன.4- பயிர்க் கடன் தள்ளுபடியில் விவசாயிகளை ஏமாற்றும் கூட்டு றவு நிர்வாகத்தை கண்டித்து உடு மலையில் விவசாயிகள் காத்தி ருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட  நிலையில், அனைவருக்கும் பயிர்க் கடன் தள்ளுபடி செய்து சான்றி தழ் வழங்கப்பட்டது.  திருப்பூர் மாவட்டம், உடு மலை மற்றும் மடத்துக்குளம் சுற்று வட்டார பகுதிகளில் உரிய தகுதி யிருந்தும் சுமார் 3,184 விவசாயிக ளின் பயிர்க்கடன் தள்ளுபடி செய் யப்படவில்லை. ஆகவே, இதில் நடைபெற்ற விதிமீறல் தொடர்பாக விவசாயிகள்  தொடர்ந்து முறை யிட்டு வருகின்றனர். அண்மையில், தமிழக செய்தித்துறை அமைச்சர்  மு.பெ.சாமிநாதன் மற்றும் மாவட்ட ஆட்சியரை சந்தித்தும் கோரிக்கை மனுக்களை வழங்கினர். ஆனால், இதன்பின்னரும் விவசாயிகளின் கோரிக்கை குறித்து மாவட்ட நிர் வாகமும், கூட்டுறவுத் துறையும்  எந்த ஒரு முடிவும்  எடுக்கவில்லை. இதனால் அப்பகுதி விவசாயிகள் பெரும் கொந்தளிப்பிற்குள்ளாகி னர். இந்நிலையில், உடுமலை  குட்டை திடல் காந்தி சிலை முன்பு  அனைத்து விவசாயிகள் சங்க  கூட்டமைப்பு சார்பில் செவ்வா யன்று பயிர் கடன் தள்ளுபடி ரசீது கிடைக்கும் வரை காத்திருப்பு போராட்டத்தில் விவசாயிகள் ஈடு பட்டனர். இதுகுறித்து போராட்டத் தில் பங்கேற்ற விவசாயிகள் கூட்ட மைப்பினர் தெரிவிக்கையில், உடு மலை மடத்துக்குளம் தாலுகாவில் 3,184 விவசாயிகளுக்கு பயிர்  கடன் தள்ளுபடி வழங்காமல் வஞ் சிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கேட்டால் முறையாக எந்த ஒரு  விளக்கமும் தரவில்லை.ஆகவே, ஜனநாயக முறைப்படி காத்தி ருக்கும் போராட்டம் அறிவிக்கப் பட்ட நிலையில், காவல் துறை யினரால் ஒலிபெருக்கி வைக்க கூடாது, குடிநீர் வைக்கக்கூடாது, நாற்காலி போடக்கூடாது என்று பல்வேறு இடர்பாடுகள் கொடுக் கப்பட்டது. இதற்கு கண்டனம் தெரிவித்து வெயிலில் தரையில் அமர்ந்து போராட்டம் நடத்துகி றோம். எத்தகைய இடர்பாடுகள் வந்தாலும் சரி, அனைவருக்கும் பயிர் கடன் தள்ளுபடி ரசீது வழங் கும் வரை போராட்டத்தை கைவிட மாட்டோம் என தெரிவித்தனர்.

மதியம் வரை பேச்சுவார்த்தை யில் உடன்பாடு ஏற்படாத நிலை யில், உடுமலை வட்டாட்சியர் ராம லிங்கம் தலைமையில் திருப்பூர் கூட்டுறவு மாவட்ட  இணை பதிவா ளர் சீனிவாசன், காவல்துறை துணை கண்காணிப்பாளர் தேன் மொழிவேல், அகில இந்திய விவ சாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் பஞ்சலிங் கம், தமிழ்நாடு விவசாய சங்கத் தின் மாவட்டத் தலைவர் எஸ்.ஆர். மதுசூதனண், மாவட்ட செயலா ளர் குமார், மாவட்ட துணை தலை வர் உடுக்கம்பாளையம் பரமசி வம், கூட்டுறவு சங்க தலைவர்  கரிச்சிக்குமார், பாரதிய விவசாய  சங்கத்தின் விஜயராகவன், மெளன குருசாமி, தமிழ்நாடு விவசாய சங் கத்தின் நிர்வாகிகள் பாலதண்ட பாணி, முத்துசாமி, ரங்கநாதன், குடிமங்கலம் ஸ்ரீதர் மற்றும்  ஜல்லி பட்டி கோபால், மொடக்குபட்டி சேனாதிபதி, தீபலபட்டி தணிகாச லம், துங்காவி பாலு, பாப்பான் குளம் லோகநாதன், செங்கொடி (எ) கனகராஜ்  உள்ளிட்ட விவசா யிகள் பங்கேற்ற பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த் தையில் அனைத்து விவசாயிக ளுக்கும் பயிர் கடன் வழங்கப்படும்  என உறுதியளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட விவசா யிகளுக்கு பயிர் கடன் தள்ளு படிக்கான சான்றிதழ் உடனடியாக  வழங்கப்பட்டது. இதனால் போராட் டம் வெற்றியடைந்த நிலையில்  விவசாயிகள் மகிழ்ச்சியடைந்த னர்.