districts

img

அமராவதி ஆற்றில் முதலை நடமாட்டம் : பொதுமக்கள் கவலை

தாராபுரம், பிப்.4- தாராபுரம் அமராவதி ஆற்றில் தாளக்கரை பகுதியில்  ராட்சச முதலை கள் நடமாட்டம் நாளுக்கு நாள் அதிக ரித்து வருவதாக தகவல் கிளம்பியுள்ள தால் பொதுமக்கள் அச்சமடைந்துள் ளனர். அமராவதி ஆறு, உடுமலை பேட்டை அமராவதி அணையில் துவங்கி தாராபுரம் வழியாக கடை மடை பகுதியான கரூர் சென்று அடை கிறது. இந்த பழைமை வாய்ந்த அமரா வதி ஆற்றில் தினசரி குளிப்பது, துணி  துவைப்பது, விடுமுறை நாட்களில் குடும்பத்துடன் ஆற்றில் நீந்தி பொழுது போக்குவது வாடிக்கையாகும். இந்நி லையில் கடந்த 6 மாத காலமாக தாரா புரம் அடுத்த சீத்தக்காடு பகுதியில்  முதலைகள் இருப்பதாக ஒரு சிலர் கூறி வந்த நிலையில் திடீரென சுமார் 10 அடி  நீளமுள்ள முதலை ஒன்று அடிக்கடி பாறை மீது ஏறி ஓய்வெடுத்து வந்த தைச் சிலர் வாட்ஸ் அப் செயலியிலும், சமூக வலைத் தளத்திலும் பரப்பி வந்த னர். இதனால் சீத்தக்காடு பகுதி பொது மக்கள் அப்பகுதிக்குச் செல்வதை தவிர்த்து உள்ளனர். இந்நிலையில்  தாரா புரம் அடுத்த தாளக்கரை பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் ஆற்றிற்கு துணி  துவைக்க சென்றதாகவும், அப்போது அமராவதி ஆற்றில் சுமார் 8 அடி நீளம் கொண்ட முதலை ஒன்று தண்ணீரில் நீந்திக்கொண்டிருந்ததாகவும் கூறி  சமூக வலைத்தளங்களில் காணொளி வெளியிட்டுள்ளார். இந்த தகவல் அப்ப குதியில் வேகமாக பரவியது. இதனால்  அப்பகுதி பொதுமக்கள் பீதியடைந்துள் ளனர். எனவே சம்பந்தப்பட்ட துறையி னர் உடனடியாக அப்பகுதியில் ஆய்வு  செய்து பொதுமக்கள் அச்சத்தைப் போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத் துள்ளனர்.