districts

img

சுடுகாடு ஆக்கிரமிப்பு உடலை அடக்கம் செய்ய முடியாமல் தவிப்பு

தருமபுரி, ஆக.16- சுடுகாடு ஆக்கிரமிப்பால் இறந்தவரின் உடலை அடக்கம் செய்ய முடியாமல்  கிராம மக்கள் தவிப்புக்குள்ளாகினர்.  தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப் பட்டி அருகே உள்ள பி.துறிஞ்சிபட்டி பகுதியை சேர்ந்தவர் காசி (65). இவர் உடல்  நலக்குறைவால் செவ்வாயன்று கால மானார். இவரது உடலை அடக்கம் செய்ய  பி.துறிஞ்சிப்பட்டியில் உள்ள சுடுகாட்டிற்கு  கொண்டு சென்றனர். அப்போது, சுடுகாட் டிற்கு அருகே வசித்து வரும் மக்கள் இறந்த வர் உடலை அடக்கம் செய்ய கூடாது என  கூறினர். மேலும், 2.45 ஏக்கர் இடம் கொண்ட சுடு காட்டை அருகில் உள்ள சில நில உரிமையா ளர்கள் 2.30 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து உள்ளதாகவும், ஆக்கிரமிப்பு செய் யப்பட்ட இடத்தை முறையாக அளவீடு செய்து ஆக்கிரமிப்பை மீட்டு உடல்கள் அடக்கம் செய்யப்படாத இடத்தில் அடக்கம்  செய்து கொள்ளுங்கள் என காசி உற வினர்களிடம் கூறி உடலை அடக்கம் செய்ய  விடாமல் தடுத்ததால் அப்பகுதியில் பர பரப்பு ஏற்பட்டது.  இது குறித்து தகவலறிந்த ஊராட்சி மன்ற தலைவர் முருகன், பொம்மிடி காவல் நிலைய காவல் ஆய்வாளர் நாகலட்சுமி, பாப்பி ரெட்டிப்பட்டி வட்டாட்சியர் வள்ளி மற்றும் வருவாய்த் துறையினர் சமாதான பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். இப்பேச்சு வார்த்தை தோல்வி அடைந்த நிலையில், இறந்த காசியின் உடல் இரண்டு மணி நேரத் திற்கு மேல் ஆகியும் அடக்கம் செய்ய முடி யாமல் தவித்தனர். மீண்டும் அப்பகுதி மக்களிடையே சமாதான பேச்சு வார்த்தை நடத்தி ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட சுடு காட்டு நிலம் மீட்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்ததை அடுத்து இறந்த காசியின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.