districts

img

சிபிஎம் கந்துவட்டி ஒழிப்பு மாநாடு எதிரொலி: போலீசார் பிரச்சாரம்

நாமக்கல், செப்.26- கந்து வட்டி மற்றும் நிதி நிறு வனங்களின் அழுத்தத்தால் தற் கொலை நடவடிக்கைகள் அதிக ரித்து வருகிற நிலையில், இதற்கெ திராக சிபிஎம் கந்து வட்டி ஒழிப்பு சிறப்பு மாநாடு நடைபெற்ற நிலை யில், இதன் எதிரொலியாக காவல் துறையினர் வீதிவீதியாக விழிப்பு ணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரு கின்றனர். நுண்நிதி நிறுவனங்கள், கந்து வட்டி கும்பல்களிடம், விரட்டும் வறு மையின் காரணமாக வேறு வழி யின்றி ஏழை எளிய உழைப்பாளி  மக்கள் கடன்களை பெறுகின்றனர். இதில், தவணைகள் செலுத்த கால தாமதமானால், வசூல் செய்யவரும் நிதிநிறுவன ஊழியர்கள் தகாத வார்த்தைகளில் பேசுகின்றனர். வீட் டில் உள்ள பொருட்களையும் அடா வடித்தனமாக எடுத்து செல்கின்ற னர். இதனால், அவமானத்திற்கும், மனவுளைச்சலுக்கும் ஆளாகும்  பெண்கள் தற்கொலைக்கு முயற்சிக் கின்றனர். கடந்த 20 நாட்களில் குமாரபாளையம் மற்றும் அதன் சுற் றுப்புற பகுதிகளில் மட்டும் 14 பெண் கள் தற்கொலை முயற்சிக்கு தள்ளப் பட்டு மருத்துவ  சிகிச்சைக்கு பிறகு  வீடு திரும்பி உள்ளனர். இதனைத்தொடர்ந்து, நாமக் கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் கடந்த ஞாயிறன்று மார்க்சிஸ்ட் கம் யூனிஸ்ட் கட்சியின் சார்பில் சிறப்பு மாநாடு நடைபெற்றது. இதில், நுண் நிதி நிறுவனங்கள் மற்றும் கந்து  வட்டி நிறுவனங்களின் அடாவடிப் போக்கு குறித்தும், பெண்கள் மீது தொடுக்கப்படும் கடும் நெருக்கடி குறித்தும், இதனால் ஏற்படும் தற் கொலைகள் மற்றும் தற்கொலை முயற்சிகள் அதிகரித்து வருவதை மார்க்சிஸ்ட் கட்சி, தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றது. இம்மாநாட்டில் மார்க்சிஸ்ட் கட்சி யின் மாநிலச்செயலாளர் கே.பால கிருஷ்ணன் உள்ளிட்ட தலைவர் கள் பங்கேற்றனர். இம்மாநாட்டின் எதிரொலி யாக, குமாரபாளையம் நகராட்சிக் குட்பட்ட ஐந்தாவது வார்டு பகுதி யான ஏரித்தெரு பகுதியில், காவல் துறையினர் பிரச்சாரம் மேற்கொண் டனர். இதில் கலந்து கொண்ட பெண் களிடம் எந்த மாதிரியான கடன் பிரச் சனை உள்ளது. எந்த  நிறுவனங்களில் கடன் பெற்றுள்ளீர்கள், என்ற விவ ரங்களை கூடியிருந்த பெண்களிடம் காவல்துறையினர் கேட்டு பதிவு  செய்து கொண்டனர். பின்னர், இக் கூட்டத்தில், காவல் ஆய்வாளர் தவ மணி பேசுகையில், விசைத்தறி தொழிலாளர்கள் அதிகமுள்ள இப் பகுதியில், கொரோனா தொற்று காலத்தில் ஏற்பட்ட பாதிப்பு இன் னும் சீராகவில்லை. விசைத்தறி தொழிலாளர்கள் பல்வேறு இன் னல்களை சந்தித்து வருகின்றனர்.  இந்நிலையில், கடந்த சில மாதங் களாக மைக்ரோ பைனான்ஸ் மற் றும் நிதி நிறுவனங்கள் அடாவடி வசூலில் ஈடுபட்டு வருகின்றனர்.  இதில் தொழிலாளர்கள் தற்கொலை செய்து கொள்வது, தற்கொலை முயற்சி சம்பவங்கள் அதிகரித்து வருவது வேதனை அளிக்கிறது. பெண்கள் பெரும்பகுதியினர் முறையான விழிப்புணர்வு இல்லா மல் கடன் பெறுகின்றனர். திடீரென ஏற்படும் சிக்கல்களை சமாளிக்க  முடியாமல் தவித்துப் போகின்ற னர். தற்கொலை செய்து கொள்கின் றனர். அவர்களின் வாரிசுகள் இன்று ஆதரவற்ற நிலையில் நிர்க் கதியாக நிற்கின்றனர். நுண் நிதி நிறுவனங்களைப் பொறுத்தவரை யாருடைய வங்கிக் கணக்கில் பணம் செலுத்தப்படுகி றதோ அதனடிப்படையிலேயே பணம் வசூல் செய்வார்கள். நீங்கள் உங் கள் வங்கி கணக்கில் பணம் பெற்று  யாருக்கு கொடுத்திருந்தாலும் நிதி நிறுவனங்களை சேர்ந்தவர்கள் உங் களை மட்டுமே அணுகுவார்கள். எனவே அப்படி உதவும் பொருட்டு பணம் வாங்கி கொடுக்கும் பெண் கள் அத்தகைய நடவடிக்கைகளை கைவிட வேண்டும். அப்படி உற் றார் உறவினர் பெண்கள் கட்டாயம்  பண உதவி செய்ய வேண்டும் என  நினைத்தால் அவர்களுடைய வங்கி கணக்கிற்கு பணத்தை மாற்றி விடுங்கள். அது ஒரு ஆவணமாக இருக்கும்.  அதே போல கந்துவட்டிக்கு எதி ரான கடுமையான நடவடிக்கை களை தமிழக அரசு எடுத்து வருகி றது. அநியாய வட்டி பெறும் நபர் கள் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தால் உரிய நடவடிக் கைகள் எடுக்கப்படும். ஒவ்வொரு  பகுதிகளிலும் தினந்தோறும் பொது  மக்களை சந்திப்பது மிக முக்கிய நோக்கம் கடன் பிரச்சனைகளால் தற் கொலை முயற்சிகளை தடுப்பது, சட்டரீதியாக என்ன மாதிரியான உதவிகளை இங்குள்ள விசைத் தறி தொழிலாளர்களுக்கு, பெண்க ளுக்கு செய்ய முடியுமோ அதை செய்வதற்கான முயற்சிகளை மேற் கொள்கிறோம். பொதுமக்கள் இனி வரும் காலங்களில் விழிப்போடு  செயல்பட வேண்டும். எனவே, பெண் கள் தைரியமாக காவல் நிலையத் தில் புகார் தெரிவிக்கலாம். இது போல பல்வேறு இடங்களில் தினந் தோறும் கூட்டங்களை நடத்த உள் ளோம், என்றார்.