திருப்பூர், டிச. 13 - ஊத்துக்குளி பேரூராட்சியில் வீட்டு குடிநீர் இணைப்பு கோரி 800 -க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்து ஓராண்டுக்கு மேலாக காத்திருக்கும் நிலையில் விரைவில் அவர்களுக்கு குடிநீர் இணைப்பு வழங்க நடவ டிக்கை எடுக்குமாறு மார்க்சிஸ்ட் கம் யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள் ளது. ஊத்துக்குளி பேரூராட்சி தலை வர் ரா.பழனியம்மாளிடம் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஊத்துக் குளி தாலுக்கா குழு செயலாளர் எஸ். கே.கொளந்தசாமி தலைமையில் திங்களன்று அளித்த மனுவில் கூறியி ருப்பதாவது: ஊத்துக்குளி-சென்னிமலை சாலை ரயில்வே நுழைவு பாலத்தில் செல்லும் கழிவுநீர் பிரச்சினைக்கு தீர்வு காணக் கோரி கடந்த அக்டோபர் 21 அன்று வாலிபர் சங்கத்தினர் சாலை மறியல் நடத்தினர். அப்போது அடுத்த 20 நாட்களில் இப்பிரச்சினை தீர்க்கப்படும். என உறுதியளிக்கப்பட் டது. ஆயினும் இன்னும் பிரச்சனை தீர்க்கப்படவில்லை. பாதசாரிகள் நிலைமை படுமோசமாக உள்ளது. ஆகவே இப்பிரச்சினைக்கு கழிவு நீரை குழாய் வழியே வெளி யேற்றவும், பாலத்திற்கு அடியில் பழு தான பேவர் பிளாக் சாலையை சீர மைக்கவும் உடனடியாக நடவ டிக்கை எடுக்க வேண்டும்.
குடிநீர் இணைப்பு
ஊத்துக்குளி பேரூராட்சியில் வீட்டு குடிநீர் இணைப்பு கோரி 800 -க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்து ஓராண்டுக்கு மேலாகியும் இன்னும் இணைப்பு வழங்கப்படவில்லை. அதன்பின்பு புதிய வீடு கட்டியவர்கள் 100-க்கும் மேற்பட்டோர் புதியதாக விண்ணப்பிக்க தயார் நிலையில் உள்ளனர். வீட்டு குடிநீர் இணைப்பு வழங் கப்படாமல் பேரூராட்சி நிர்வாகம் இழுத்தடித்து வருவதால் அன்றாடம் வேலைக்கு செல்லும் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆகவே விண்ணப்பித்து உள்ளோருக்கும், புதியதாக கோருவோருக்கும் விண் ணப்பங்களை பெற்று பதிவு செய்து, உடனடியாக வீட்டு குடிநீர் இணைப்பு வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தேவை வெளிப்படை தன்மை
ஊத்துக்குளி பேரூராட்சியில் வரைபட அங்கீகாரம், சொத்து வரி விதிப்பு செய்ய மிகவும் காலதாமதம் செய்யப்படுவதாகவும், வெளிப் படை தன்மை இல்லாத நிலையும், கட் டணங்களை அதீதமாக நிர்ணயக்கப் படுவதாகவும்,பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். ஆகவே கோரு கிற பொதுமக்களுக்கு விரைவாக இப்பணிகளை செய்து கொடுக்க வும், கடந்த கால நிர்வாகத்தால் அதீத மாக தீர்மானிக்கப்பட்ட வரைபட அங் கீகாரத்திற்கான பல்வேறு கட்டணங் களை உரிய முறையில் பரிசீலித்து பொதுமக்களுக்கு பாதிப்பில்லாமல் நிர்ணயம் செய்ய வேண்டும். இந்த கோரிக்கைகளை உடன டியாக நடவடிக்கை எடுத்து நிறை வேற்றி தர மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஊத்துக்குளி வட்டக்குழு கேட்டுக் கொள்வதாக கூறப்பட்டுள் ளது. இந்த நிகழ்வில் மாவட்ட செயற் குழு உறுப்பினர் ஆர்.குமார், ஊத்துக் குளி பேரூராட்சி 7ஆவது வார்டு உறுப்பினர் கு.சரஸ்வதி, தாலுக்கா குழு உறுப்பினர்கள் கை.குழந்தை சாமி, ச.சசிகுமார், வி.கே.பழனிசாமி, ஊத்துக்குளி டவுன் கிளைச் செயலா ளர் கே.பெரியசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.