திருப்பூர், ஜன.25- தெருநாய்களிடமிருந்து மக்களை பாதுகாக்க நட வடிக்கை எடுக்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் வேலம்பாளையம் கிளை சார்பில் மேயர் தினேஷ்குமார் மற்றும் ஆணையாளர் கிராந்திகுமார் பாடி ஆகியோரிடம் மனு அளிக்கப்பட்டது. திருப்பூர் மாநகராட்சி, முதலாம் மண்டலத்துக்குட்பட்ட 11,13,14 ஆவது வார்டுகள் உள்ளிட்ட பகுதிகளில் தெருநாய்க் கடியினால் தினந்தோறும் பலர் பாதிக்கப்பட்டு வருகின்ற னர். குறிப்பாக, 13 ஆவது வார்டு டிடிபி மில் பகுதி யில் கடந்த 10 நாட்களில் மட்டும் 20க்கும் மேற்பட்டவர்களை தெருநாய்கள் கடித்துள்ளன. கடந்த 6 மாதத்தில் மட்டும் 347 பேர் தெருநாய்க்கடியால் பாதிக்கப்பட்டு, முதல் தவணை ஊசி செலுத்தியுள்ளதாக வேலம்பாளையம் அரசு மருத்துவமனை தகவல் தெரிவிக்கிறது. தெரு நாய்கடியிலிருந்து மக்களைப் பாதுகாத்திட நடவடிக்கை எடுத்திட வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, வேலம்பாளையம் நகரக்குழுவின் சார்பாக வழங்கிய மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்நிகழ்வில், திருப்பூர் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.ரங்கராஜ், வேலம்பாளையம் நகரச் செயலாளர் ச.நந்தகோ பால், அனுப்பர்பாளையம் புதூர் கிளைச் செயலாளர் என்.விஸ்வநாதன், சேகர், கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.