சிபிஎம் தீக்கதிர் கிளைச் செயலாளர்கள் தேர்வு
கோவை, நவ.27- மார்க்சிஸ்ட் கட்சியின் தீக்கதிர் கோவைப்பதிப்பின் கிளைச் செயலாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தீக்கதிர் கோவைப்பதிப்பின் ஆசிரியர் மற்றும் நிர்வாகக் கிளை கள் மாநாடு, நவ.19 ஆம் தேதியன்று, ராமநாதபுரம் பகுதி யிலுள்ள தீக்கதிர் அலுவலகத்தில் நடைபெற்றது. செய்தி ஆசிரியர் ஏ.ஆர்.பாபு தலைமை வகித்தார். பொது மேலாளர் எஸ்.ஏ.மாணிக்கம் செங்கொடியை ஏற்றி வைத்தார். எம்.மகாலட்சுமி வரவேற்றார்.
எம். வெயிலு முத்து அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார். கட்சி யின் மாநிலக்குழு உறுப்பினரும், தீக்கதிர் ஆசிரியரு மான எஸ்.பி.ராஜேந்திரன் துவக்கவுரையாற்றினார். நிர் வாகக்கிளைச் செயலாளர் ஏ.நெல்சன்பாபு மற்றும் ஆசி ரியர் கிளைச் செயலாளர் மனோஜ் பிரசாத் ஆகி யோர் அறிக்கைகளை முன்வைத்தனர். இம்மாநாட் டில், ஊடகவியலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய ஒன்றிய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற் றப்பட்டன. இதையடுத்து கட்சியின் தீக்கதிர் கோவைப் பதிப்பு ஆசிரியர் கிளைச் செயலாளராக பி.ஜீவா, நிர்வாக கிளைச் செயலாளராக ஏ.நெல்சன்பாபு ஆகி யோர் தேர்வு செய்யப்பட்டனர். இதனைத்தொடர்ந்து கட்சியின் மாநில மாநாட்டு பிரதிநிதிகள் தேர்வு செய்யப்பட்டனர். கட்சியின் மாநிலக்குழு உறுப்பின ரும், தீக்கதிர் கோவை பொறுப்பாசிரியருமான எம். கண்ணன் நிறைவுரையாற்றினார். முடிவில், ஜே. ஷோபனா நன்றி கூறினார்.
நியாயவிலைக்கடை பணியாளர்களுக்கான நேர்முகத்தேர்வு: ஆட்சியர் நேரில் ஆய்வு
நாமக்கல், நவ.27- நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்று வரும் நியாய விலைக்கடை பணியாளர்களுக்கான நேர்முகத்தேர்வு குறித்து மாவட்ட ஆட்சியர் ச.உமா நேரில் ஆய்வு செய் தார்.
கூட்டுறவுச் சங்கங்கள் நடத்தும் நியாயவிலைக் கடைகளில் காலியாக உள்ள விற்பனையாளர்கள் மற் றும் கட்டுநர்கள் பணியிடம் நேர்முகத்தேர்வு மூலம் நிரப் பப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டு, விண்ணப் பங்கள் இணையவழி பெறப்பட்டது. அதன்படி, நாமக் கல் மாவட்டத்தில் காலியாக உள்ள 97 விற்பனையாளர் பணியிடங்களுக்கு 5,828 விண்ணப்பங்களும் மற்றும் 12 கட்டுநர் பணியிடங்களுக்கு 1,004 விண்ணப்பங்களும் பெறப்பட்டன. தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு நேர்முகத்தேர்வு நாமக்கல் மாவட்ட ஆள்சேர்ப்பு பணி நிலையத்தால் நாமக்கல் மாநகராட்சி, மோகனூர் சாலை, அரசு தெற்கு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி கலை அரங்கத்தில் நவ.25 முதல் டிச.3 ஆம் தேதி வரை, காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடத்தப் பட்டு வருகிறது. மேலும், கடந்த இரண்டு நாட்களாக 1,700 விண்ணப்பதாரர்கள் நேர்முகத்தேர்வுக்கு அழைக் கப்பட்டுள்ளார்கள். 60 சதவிகித விண்ணப்பதாரர்கள் (1,012 நபர்கள்) நேர்முகத்தேர்வில் கலந்து கொண்டுள் ளனர். இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பணி நியமன ஆணை டிசம்பர் இறுதிக்குள் வழங்க நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளது. இந்நிலையில், அரசு தெற்கு மேல் நிலைப்பள்ளியில் நடைபெற்று வரும் நேர்முகத்தேர்வு குறித்து, மாவட்ட ஆட்சியர் ச.உமா செவ்வாயன்று ஆய்வு செய்தார். இந்த ஆய்வில் கூட்டுறவு சங்கங்க ளின் இணைப்பதிவாளர் க.பா.அருளரசு உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
ஏரியை தூர்வார விவசாயிகள் வலியுறுத்தல்
ஏரியை தூர்வார விவசாயிகள் வலியுறுத்தல் தருமபுரி, நவ.27- ராமனூர் ஏரியை ஆக்கிரமித்துள்ள கருவேல மரங் களை அகற்றி, ஏரியை தூர்வார வேண்டும், என அப்ப குதி விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர். தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டத்திற் குபட்ட ராமனூர் ஏரியின் மூலம், நான்கு கிராமங்களில் உள்ள 50 ஏக்கருக்கும் மேற்பட்ட நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இந்த ஏரியானது நீண்ட காலமாக தூர்வார மல் புதர்மண்டி காணப்படுகிறது. மேலும், ஏரி முழுவதும் கருவேல மரங்கள் ஆக்கிரமித்துள்ளன. இதனால் மழை நீரை ஏரியில் சேமிக்க முடியவில்லை. இந்த ஏரி பாச னத்தை நம்பி நெல், கேழ வரகு, சிறுதானியம், காய்கறி கள் விளைவிக்கின்றனர். மழைக்காலங்களில் ஏரியில் தேங்கும் நீர் கடந்த காலங்களில் விவசாயத்திற்கு பயன் பட்டது. தற்போது வறண்டு காணப்படுவதால் விவசா யம் குறைந்துவிட்டது. எனவே, ஆக்கிரமிப்புகளை அகற்றி, ராமனூர் ஏரியை தூர்வார மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் அப்பகுதி விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
பணம் திருட்டு: வாலிபர் கைது
சேலம், நவ.27- நிதி நிறுவன அதிபரின் இருசக்கர வாகனத்தி லிருந்த பணத்தை திருடிய வாலிபரை காவல் துறையி னர் கைது செய்தனர். கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சேர்ந்தவர் சந்திர சேகரன் (64).
இவர் சேலம் மாவட்டம், கருப்பூர் அருகே உள்ள மாங்குப்பையில் வீடு எடுத்து தங்கியபடி நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். இந்நிலையில், திங்க ளன்று இவரின் இருசக்கர வாகனத்தில் ரூ.65 ஆயி ரத்தை வைத்துக்கொண்டு, மாங்குப்பை கோவில் அருகே நிறுத்தி, நண்பரிடம் பேசிக் கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர், வாகனத்திலிருந்த பணத்தை திருடிச் சென்று விட்டார். இதுகுறித்து சந்திரசேகரன் கருப்பூர் காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திய காவல் துறையி னர், திருட்டில் ஈடுபட்ட மாங்குப்பையைச் சேர்ந்த சுதந்தி ரம் (27) என்பவரை செவ்வாயன்று கைது செய்து, அவரி டமிருந்த பணத்தை பறிமுதல் செய்தனர்.
அணைகள் நிலவரம் (புதன்கிழமை)
பவானிசாகர் அணை
நீர்மட்டம் : 97.38/105அடி
நீர்வரத்து: 2166 கனஅடி
நீர்திறப்பு: 1800 கனஅடி
சோலையார் அணை
நீர்மட்டம்:145.08/160அடி
நீர்வரத்து:81.60கனஅடி
நீர்திறப்பு:404.05கனஅடி
பரம்பிக்குளம் அணை
நீர்மட்டம்:69.08/72அடி
நீர்வரத்து:879கனஅடி
நீர்திறப்பு:932கனஅடி
ஆழியார் அணை
நீர்மட்டம்:117/120அடி
நீர்வரத்து:233கனஅடி
நீர்திறப்பு:517கனஅடி
திருமூர்த்தி அணை
நீர்மட்டம்:49.00/60அடி
நீர்வரத்து:816கனஅடி
நீர்திறப்பு:901கனஅடி
அமராவதி அணை
நீர்மட்டம்: 88/90அடி
நீர்வரத்து:276கனஅடி
நீர்திறப்பு:38கனஅடி
சாயக்கழிவுநீர் கலந்த தண்ணீருடன் கூட்டத்திற்கு வந்த திமுக கவுன்சிலர்
நாமக்கல், நவ.27- சாயக்கழிவுநீர் கலந்த தண்ணீருடன், பள் ளிபாளையம் நகர்மன்றக் கூட்டத்திற்கு வந்த திமுக கவுன்சிலரால், பரபரப்பு ஏற்பட்டது. நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் நகராட்சியில் மொத்தம் 21 வார்டுகள் உள் ளன.
இதில் 12 ஆவது வார்டுக்குட்பட்ட பகுதி யில் கடந்த வாரத்தில் நிலத்தடி நீரில் சாயக் கழிவுநீர் கலந்து, சிவப்பு நிறத்தில் தண்ணீர் வெளியேறியது. மேலும், அருகிலுள்ள நீர் நிலைகளில் உள்ள தண்ணீர் சிவப்பு நிறத்தில் மாறியதால், சாயக்கழிவுநீர் கலந்த அந்த நீரை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. பள்ளிபாளையம் வட்டாரம் முழுவதும் இது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், கடந்த ஒரு வார காலமாக மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள், வருவாய்த்துறையினர், வட்டாட்சியர், கோட்டாட்சியர், பொதுப் பணித்துறையினர் என பல்வேறு தரப்பு அரசு அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்ற னர்.
மேலும், தினந்தோறும் பல்வேறு இடங்க ளில் அதிகாரிகள் குழு ஆய்வு மேற் கொண்டுள்ள போதிலும், தற்போது வரை சாயக்கழிவுநீர் குடிநீரில் கலந்து வருகிறது. அதிகாரிகளின் ஆய்வில் எவ்வித முன்னேற்ற மும் இல்லை என 12 ஆவது வார்டு திமுக கவுன்சிலர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இந்நிலை யில், நகராட்சி அலுவலகத்தில் செவ்வா யன்று நடைபெற்ற மாதந்திர நகர்மன்றக் கூட்டத்திற்கு, சாயக்கழிவு நீர் கலந்த தண் ணீரை கொண்டு வந்து, நகர்மன்றத் தலைவர் செல்வராஜ், துணைத்தலைவர் பாலமுருகன் ஆகியோரிடம் இதுகுறித்து திமுக கவுன்சி லர் புகார் தெரிவித்தார். மேலும், தங்கள் வார்டு பகுதியை சுற்றி லும் சாயப்பட்டறைகள் ஏதும் இயங்காத நிலையில், குடிநீரில் சாயக்கழிவுநீர் எவ் வாறு கலந்தது என்பதை குறித்து அதிகாரி கள் உரிய விசாரணை மேற்கொள்ள வேண் டும், என்றார். அதற்கு பதிலளித்த நகராட்சி ஆணையர் தயாளன், இதுகுறித்து உரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள் ளது. மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் விசாரணை மேற்கொள்வார்கள், என்றார்.
வருவாய்த்துறை அலுவலர்கள் 2 ஆவது நாளாக காத்திருப்புப் போராட்டம்
வருவாய்த்துறை அலுவலர்கள் 2 ஆவது நாளாக காத்திருப்புப் போராட்டம் தருமபுரி, நவ.27- பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு வரு வாயத்துறை அலுவலர் சங்கத்தினர் புதனன்று 2 ஆவது நாளாக காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற னர். இளநிலை, முதுநிலை வருவாய் ஆய்வாளர் பெயர் மாற்ற, விதித்திருத்த அரசாணையை உடனடியாக வெளியிட வேண் டும். மூன்றாண்டுகளுக்கு மேற்பட்ட அலுவலக உதவியா ளர் காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு வரு வாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் தொடர் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி, புதனன்று 2 ஆவது நாளாக இப்போராட்டம் தொடர்கிறது. கோவை, ஈரோடு, தருமபுரி, நீலகிரி, திருப்பூர், நாமக்கல், சேலம் உள் ளிட்ட மாவட்டங்களில் இந்த போராட்டங்கள் தொடர்ந்து நடை பெற்று வருகிறது.