அவிநாசி, டிச.7- பேருந்துகளை முறையாக இயக்கக் கோரி வடுகபாளையம் மற்றும் நடுவச்சேரி ஆகிய பகுதிகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கையெழுத்து இயக்கம் நடத்தி னர். அவிநாசி ஒன்றியம் வடுகபாளையம், நடு வச்சேரி பகுதிகளில் 15 ஆயிரத்துக்கும் மேற் பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் 36, 36 ஏ, என்எஸ் ஆகிய பேருந் துகள் இயங்கிக் கொண்டிருக்கிறது. தற் போது, இந்த பேருந்துகள் குறித்த நேரத்திற்கு இயங்காததால் பொதுமக்கள், பள்ளி குழந் தைகள், தொழிலாளிகள் அவதிப்பட்டு வரு கின்றனர். இதனை முறைப்படுத்த வேண்டும். அதேபோல காலை 10:30 மணி முதல் மாலை 3:30 வரை பேருந்துகள் இயங்குவதில்லை. இதனால், மருத்துவமனைக்குச் செல்லும் நோயாளிகள் அவதிப்பட்டு வருகின்றனர். குறித்த நேரத்திற்கு அவிநாசிக்கு வருவ தற்கும் செல்வதற்கும் பேருந்துகள் கிடைக் காததால் பள்ளி மாணவர்களின் கல்வி பாதிக் கிறது. எனவே பேருந்துகளை முறையாக இயக்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியினர் கையெழுத்து இயக்கம் நடத்தினர். மேலும், பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட கையெழுத்து படிவங் களை மாவட்ட ஆட்சியரை சந்தித்து அளிக்க உள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியி னர் தெரிவித்தனர். இந்த கையெழுத்து இயக்கத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட குழு உறுப்பினர் பழனிசாமி, ஊராட்சி மன்ற உறுப்பினர் ராமசாமி, முன்னாள் கிளைச் செய லாளர் சுப்பிரமணியம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.