திருப்பூர், ஆக.20 - வெள்ளகோவில், சிவ நாதபுரத்தில் பேருந்து நிறுத்த நிழற்குடை அமைக்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. இந்த கையெழுத்து இயக்கத்தை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகரமன்ற உறுப்பினர் ராதாமணி ஞாயிறன்று துவக்கி வைத்தார். கிளைச் செயலாளர் லோகேஸ்வரன் தலைமை வகித்தார். கட்சியின் காங்கேயம் தாலுகாச் செயலாளர் கே.திருவேங்கடசாமி, தாலுகா கமிட்டி உறுப்பினர் தங்கவேல் ஆகியோர் கோரிக்கையை வலியுறுத்தி உரையாற்றினர். அப்பகுதி பொதுமக்களிடம் 500க்கும் மேற்பட்ட கையெழுத்துக்கள் பெறப்பட்டன.