திருப்பூர், மார்ச் 16- பூலாங்கிணர் ஊராட்சியில் பாழ டைந்து காணப்படும் கால்நடை மருத் துவமனையை சீரமைக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை வைத்துள்ளது. இதுகுறித்து உடுமலை ஒன்றிய குழு செயலாளர் கனகராஜ் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது, உடுமலை தாலுகா பூலாங்கி ணர் ஊராட்சியில் கடந்த 2014 ஆம் ஆண்டு கால்நடை மருத்துவமனை கட்டப்பட்டது. இது தரம் இல்லாமல் கட்டப்பட்டதாலும், முறையாக பரா மரிப்பு இல்லாததாலும் தற்போது பயன்படுத்த முடியாத நிலையில் பாழடைந்து காணப்படுகிறது. இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட் சியின் உடுமலை ஒன்றிய குழு சார் பில் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் புகார் தெரிவித்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. இந்த கால்நடை மருத்துவ மனைக்கு பூலாங்கிணர், ராகல்பாவி, அந்தியூர், கணபதிபாளையம் உட் பட 10க்கும் மேற்பட்ட கிராமங்களி லிருந்து விவசாயிகள் கால்நடை களை அழைத்து வருகிறார்கள். கால்நடை மருந்தகக்கட்டிடம் தரைப் பகுதி சுவர்கள் அனைத்தும் விரிசல் விழுந்து காணப்படுகிறது. ஆபத் தான நிலையில் உள்ள இந்த கட்டி டத்தை கால்நடைத்துறை நிர்வாக மும், மாவட்ட நிர்வாகமும் சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.