சேலம், மார்ச் 11- தேர்தல் பத்திர மெகா ஊழலை கண் டித்து, சேலம் கோட்டை மைதானத்தில் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் திங்களன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பாஜக அரசு தேர்தல் பத்திரம் என்கிற பெய ரில் மோசடி செயலை செய்து, அதனை சட்ட மாக்கி கொள்ளையடித்து வந்தது தெரியவந் துள்ளது. தேர்தல் பத்திரம் என்ற பெயரில் கார்ப்பரேட் முதலாளிகள் வங்கிகளிடம் தேர் தல் நன்கொடை பத்திரம் என்கிற பெயரில் பணத்தை கொடுத்து வாங்கி தனக்கு சாதக மான அரசியல் கட்சிக்கு நன்கொடையாக வழங்கி வந்தது. இதில் முறையாக எந்த கணக்கும் கடைபிடிக்கவில்லை. இதனை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. உச்சநீதிமன்றம் கடந்த பிப்.14 ஆம் தேதி யன்று 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு, தேர்தல் பத்திரத்திட்டத்தை ரத்து செய்து தீர்ப்பளித் தது. மேலும், தேர்தல் பத்திரம் அரசியல மைப்பு சட்டத்திற்கு எதிரானது எனவும், வாக் காளர்களின் தகவல் அறியும் உரிமைக்கு எதி ரானது மற்றும் ஜனநாயக நடைமுறையை யும், வெளிப்படை சுதந்திரமான தேர்தலை யும் பாதிக்கக்கூடியது என தீர்ப்பில் வலியு றுத்தியது. மேலும், பாரத ஸ்டேட் வங்கி நிர்வாகம் தேர்தல் பத்திர குறிப்புகளை வெளியிட வேண் டும் எனவும் தெரிவித்தது. பாஜக ஒன்றிய அரசு தேர்தல் பத்திரம் என்ற பெயரில் மெகா ஊழல் செய்திருப்பதாக குற்றஞ்சாட்டி மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சேலம் மாவட் டக்குழு சார்பில் கோட்டை மைதானத்தில் திங்களன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பொன்.ரமணி தலைமை வகித்தார். இதில் மாவட்ட செயற் குழு உறுப்பினர்கள் ஆர்.வெங்கடபதி, பி. ராமமூர்த்தி, ஏ.ராமமூர்த்தி, ஐ.ஞானசௌந் தரி, சேலம் மேற்கு மாநகரச் செயலாளர் எம். கனகராஜ், தாலுகாச் செயலாளர் கே.எஸ்.பழனிசாமி, வடக்கு மாநகரச் செயலாளர் என். பிரவீன் குமார் உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர். இதேபோன்று எடப்பாடியிலுள்ள ஸ்டேட் பேங்க் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சிபிஎம் தாலுகாச் செயலாளர் மு.பெரியண் ணன் தலைமை வகித்தார். இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.கே.சேகர், ஜி.கணபதி, மாவட்டக்குழு உறுப்பினர் எஸ்.முத்துசாமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். ஜலகண்டாபுரத்தில் சிபிஎம் ஒன்றியச் செய லாளர் கே.ராஜாத்தி தலைமையில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்தில், மாவட்டக்குழு உறுப்பினர் ஜி.கவிதா உள்ளிட்ட பலர் பங் கேற்றனர். மேச்சேரி ஸ்டேட் பேங்க் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சிபிஎம் ஒன்றி யச் செயலாளர் ஜி.மணிமுத்து, மையக் கிளைச் செயலாளர் பி.தங்கவேலு ஆகியோர் கலந்து கொண்டனர்.