districts

img

மின்சாரத் திருத்த சட்ட மசோதாவை திரும்பப்பெறுக: சிபிஎம் ஆர்ப்பாட்டம்

நாமக்கல், பிப்.23- மின்சாரத் திருத்த சட்ட மசோ தாவை ஒன்றிய அரசு திரும்பப்பெற வேண்டும் என வலியுறுத்தி, மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். ஒன்றிய அரசு தமிழ்நாட்டில் புதிய  மின்சார திருத்த மசோதாவை அமல் படுத்த தொடர்ந்து முயன்று வருகி றது. அச்சட்டம் அமலானால் வீடுகள், விசைத்தறி, விவசாயம், போன்றவற் றிற்கு உள்ள மின்சார மானியம் பறி போகும். முன்பணம் செலுத்தி மின்சா ரத்தை பெறக்கூடிய நிலை ஏற்படும். உச்சபட்ச நேரத்திற்கு கூடுதல் மின் கட்டணம் வசூல் செய்யபடும். மின்  ஊழியருக்கு நிரந்தர ஓய்வூதியம், சட்ட சலுகைகள் பறிப்பு என அனைத்து  பகுதி மக்களையும் பாதிக்கக்கூடிய, இச்சட்டதை அமல்படுத்தாமல் தமிழ் நாடு அரசு நிராகரிக்க வேண்டும் என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர். நாமக்கல் மாவட்டம் குமாரபா ளையம் மின்சார வாரிய அலுவலகம் முன்பு, குமாரபாளையம் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகரக் குழு சார்பில், பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத் திற்கு சிபிஎம் நகரக்குழு செயலாளர் சக்திவேல் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம். அசோகன் கோரிக்கைகளை வலியு றுத்தி சிறப்புரையாற்றினார். இதைத்தொடர்ந்து குமாரபாளை யம் பகுதியில் மின்சாரத் திருத்த  மசோதாவுக்கு எதிராக மின் நுகர்வோ ரிடம் பெறப்பட்ட கையெழுத்துக்கள் அடங்கிய படிவம் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் வல்லப தாஸி டம் வழங்கப்பட்டது. முன்னதாக,  இந்த ஆர்ப்பாட்டத்தில் சிபிஎம் மாவட் டக்குழு உறுப்பினர் எம்.ஆர்.முருகே சன், முன்னாள் நகரச் செயலாளர் எஸ்.ஆறுமுகம், நகரக்குழு உறுப்பி னர்கள் உட்பட பலர் கலந்து கொண்ட னர்.