districts

img

நீட் தேர்வை விலக்கக்கோரி சிபிஎம் ஆர்ப்பாட்டம்

திருப்பூர், ஜூன் 23- தமிழ்நாட்டிற்கு நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என வலியு றுத்தி மார்க்சிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர். மருத்துவக்கல்வியை கனவாக் கும், லஞ்சம் ஊழல் முறைகேடுகள் நிறைந்த நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திருநெல்வேலி மாவட்டக்குழு அலுவலகத்தை தாக்கியவர்கள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ்  வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என  வலியுறுத்தி சிபிஎம் சார்பில் ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. திருப்பூர் மாவட் டம், பல்லடம், கொசவம்பாளையம் சாலையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு கட்சியின் ஒன்றியக்குழு உறுப் பினர் சி.முருகேஷ் தலைமை வகித் தார். இதில் ஒன்றியச் செயலாளர் ஆர்.பரமசிவம், மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் பிரவீன் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோன்று, தாராபுரம் அண்ணா சிலை அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில்  கட்சியின் தாலுகாச் செயலாளர் என்.கன கராஜ், கிளைச் செயலாளர் காளியப் பன், பொதுத் தொழிலாளர்கள் சங்கச் செயலாளர் பொன்னுசாமி உட்பட பலர்  கலந்து கொண்டனர். மார்க்சிஸ்ட் கட்சி யின் உடுமலை ஒன்றியக்குழு சார்பில்,  பள்ளபாளையம் நால்ரோட்டில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றியக் குழு உறுப்பினர் எஸ்.ஜெகதீசன் தலைமை வகித்தார். கிளைச் செயலா ளர் பி.எஸ்.சுந்தரம் வரவேற்றார். இதில்  ஒன்றியச் செயலாளர் கி.கனகராஜ், கமிட்டி உறுப்பினர்கள், கிளைச் செய லாளர்கள் உட்பட பலர் கலந்து கொண் டனர்.

ஈரோடு

இதேபோன்று ஈரோடு, சூரம்பட்டி நால்ரோட்டில் நடைபெற்ற ஆர்ப்பாட் டத்திற்கு, சிபிஎம் ஈரோடு நகரக்குழு உறுப்பினர் வி.பாண்டியன் தலைமை வகித்தார். இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.விஜயராகவன், நகரச்  செயலாளர் பி.சுந்தரராஜன், தாலுகாச்  செயலாளர் என்.பாலசுப்ரமணியன், மாவட்டக்குழு உறுப்பினர் பா.லலிதா  மற்றும் நகர, தாலுகா கமிட்டி உறுப்பி னர்கள், கிளைச் செயலாளர்கள் உட்பட  பலர் கலந்து கொண்டனர். பவானிசா கர், புளியம்பட்டி வட்டார கமிட்டி சார் பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ப. மாரிமுத்து, சி.முருகேசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நாமக்கல்

நாமக்கல் மாவட்டம், குமாரபாளை யம், ஆனங்கூர் பிரிவு சாலையில் நடை பெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு சிபிஎம் நகரச் செயலாளர் சக்திவேல் தலைமை வகித்தார். இதில் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம். அசோகன், மாவட்டக்குழு உறுப்பினர்  எம்.ஆர்.முருகேசன், முன்னாள் நகரச்  செயலாளர் ஆறுமுகம், குமாரபாளை யம் நகரக்குழு உறுப்பினர்கள், கிளைச்  செயலாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.