அவிநாசி, ஏப்.24 - 12 மணி நேர வேலை சட்ட மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் திங்களன்று திருமுருகன்பூண்டி அருகே ராக்கியாபாளையம் பேருந்து நிறுத்தம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. எட்டு மணி நேர வேலையை 12 மணி நேரமாக மாற்றி அமைக்கும் சட்டத்தை சட்டமன்றத்தில் சில தினங்களுக்கு முன்பு நிறைவேற்றப்பட்டது. இதனைக் கண்டித்து பல்வேறு அரசியல் கட்சிகள் இடதுசாரி தொழிற்சங்கங்கள் கண்டனம் தெரிவித்து போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், திருமுருகன் பூண்டி நகராட்சி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கிளைகள் சார்பாக தொழிலாளர்களுக்கு விரோதமான சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மார்க்சிஸ்ட் கம் யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியகுழு உறுப்பினர் பாலசுப்ரமணி யம் தலைமை ஏற்றார். மாவட்டகுழு உறுப்பினர்கள் வெங்க டாசலம், மைதிலி, ஒன்றிய செயலாளர் ஈஸ்வரமூர்த்தி, நகர மன்ற உறுப்பினர் தேவராஜன், கிளைச் செயலாளர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.