districts

img

மின்சார வாரியத்தை கண்டித்து சிபிஎம் ஆர்ப்பாட்டம்

நாமக்கல், அக்.13- விதியை மீறி மின் இணைப்பை வழங்கியதை கண்டித்து எலச்சிபாளையம் மின்சார வாரியம் உதவி செயற்பொறியாளர் அலுவ லகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு தாலுக்கா, வையப்பமலை, தென்னை மரத்து பாளையத்தில் உள்ள அரசு புறம்போக்கு நிலம் உள்ளது. அந்நிலத்தை நிலமற்ற வர்களுக்கு நிலம் வழங்க வேண்டும் என  தொடர்ந்து கோரிக்கை வைத்தும் நடவ டிக்கை இல்லை. இந்நிலையில், அரசு ஓய்வு  பெற்ற காவலர் ஒருவருக்கு, சம்பந்தப்பட்ட கிராம நத்தத்தில் இலவச வீட்டுமனை பட்டா  சமீபத்தில் வழங்கப்பட்டுள்ளது. இது அப் பகுதி மக்களிடையே அதிருப்தியை ஏற் படுத்தியது. இதனை ரத்து செய்ய வேண்டும்  என்று அப்பகுதி மக்கள் புகார் அளித்தனர்.  இதனையடுத்து, பட்டா மற்றும் பத்திரத்தை  ரத்து செய்து காலி இடமாக அறிவிக்கப் பட்டுள்ளது.  இந்நிலையில், அந்த இடத்தில் வழங்கப் பட்டுள்ள மின் இணைப்பை ரத்து செய்ய  வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சி மற்றும்  கிராம மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட் டனர்.  ஆர்ப்பாட்டத்திற்கு, சிபிஎம் கிழக்கு ஒன்றியச் செயலாளர் வி.தேவராஜன் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் சு.சுரேஷ், மேற்கு ஒன்றியச் செய லாளர் கே.எஸ்.வெங்கடாசலம், மூத்த  தோழர் சுந்தரம், ஒன்றியக் குழு உறுப்பி னர்கள் ரமேஷ், ராஜ், விஜய், ஈஸ்வரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.