districts

img

நூறுநாள் வேலை திட்டத்தில் முறைகேடு - சிபிஎம் ஆர்ப்பாட்டம்

சேலம், ஜூலை 22- எடப்பாடி வட்டம் கொங்கணாபுரம் ஒன்றி யம், எருமைப்பட்டி ஊராட்சியில், நூறு நாள்  வேலை திட்டத்தில் நடைபெறும் முறை கேடுகளை கண்டித்து மார்க்சிஸ்ட் கட்சி யினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  எருமைப்பட்டி ஊராட்ச்சியில் நூறு நாட்கள் முடிந்த பின்பும் வருடம் முழுவதும் தொடர்ந்து பணி செய்வது, வேலை செய்யா மல் வீட்டில் இருப்பவருக்கும் பணிக்கான அட்டை போட்டு பணத்தை கொள்ளை அடிக் கும் போக்கை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு எஸ்.முத்து சாமி தலைமை ஏற்றார்.  மாவட்டச் செயலாளர்  மேவை. சண்முகராஜா கண்டன உரையாற் றினார். இதில், சிபிஎம் மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள். ஜி.கணபதி, எஸ்கே.சேகர்,  மாவட்டக்குழு உறுப்பினர்கள் கே.ராஜாத்தி,  மு.பெரியண்ணன், எஸ்.கவிதா உள்ளிட்ட திரளானோர் பங்கேற்று கோரிக்கை முழக் கங்களை எழுப்பினர்.