districts

img

மளிகைப் பொருட்களை வாங்க கட்டாயப்படுத்துவதா?

திருப்பூர், செப்.11- அனைத்து அட்டைதாரர்களுக்கும் தர மாகவும், சரியான அளவிலும் நியாய விலைக் கடை பொருட்களை வழங்கக்கோரி மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் வேலம்பாளை யத்தில் புதனன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர்.  திருப்பூர் மாவட்டம், வேலம்பாளையம் காமாட்சியம்மன் கோவில் அருகில் உள்ள நியாய விலைக்கடை மற்றும் கிராம நிர்வாக அலுவலகம் அருகில் உள்ள நியாய விலைக் கடை ஆகியவற்றின் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின், வேலம்பாளையம் பி கிளை  சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற் றது. இதில், ஒன்றிய அரசு, தமிழகத்துக்கான ரேசன் ஒதுக்கீட்டை முழுமையாக தர வேண் டும். அரிசி உள்ளிட்ட நியாய விலை பொருட் கள் கடத்தலைத் தடுக்க வேண்டும். அனைத்து அட்டைகளுக்கும் எல்லா நாட்களி லும் பொருட்கள் வழங்க வேண்டும். மளி கைப் பொருட்கள் வாங்க கட்டாயப்படுத்தக் கூடாது. முழுநேரமாக செயல்பட்டு வரும் கடைகளை மூன்று நாட்கள் மட்டும் செயல் படும் கடைகளாக மாற்றக் கூடாது. காலியாக உள்ள பணியிடங்களில் ஊழியர்களை நிய மிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக் கைகள் வலியுறுத்தப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு வேலம்பாளை யம் மாதர் கிளைச் செயலாளர் எஸ்.வசந்தி  தலைமை வகித்தார். நகரச் செயலாளர் ச. நந்தகோபால், நகரக் குழு உறுப்பினர்கள் அ. ஆறுமுகம், பி.நவபாலன், கிளைச் செயலா ளர் வி.வெள்ளிங்கிரி, சிஐடியு பனியன் சங்க  ஏரியாக்குழு தலைவர் எம்.பாண்டியராஜ் ஆகியோர் உரையாற்றினர். மாதர் சங்க நக ரத் தலைவர் வி.அழகு, வேலம்பாளையம் பி  கிளைச் செயலாளர் வி.ஆர்.சரவணகுமார், மூத்த தோழர் என்.சுப்பிரமணியம் உள்ளிட்ட ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர்.