districts

img

அடிப்படை வசதிகளை விரைந்து நிறைவேற்றக்கோரி சிபிஎம் ஆர்ப்பாட்டம்

பென்னாகரம், நவ.18- குடிநீர், தெரு விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதி களை நிறைவேற்ற வலியுறுத்தி, பென்னாகரம் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு வெள்ளியன்று மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தருமபுரி மாவட்டம், பென்னாகரம் ஒன்றியத்திற்குட்பட்ட மஞ்ச நாயக்கன அள்ளி, கலப்பம்பாடி ஆகிய ஊராட்சிகளில் குடிநீர், தெரு விளக்கு, கழிவு நீர் கால்வாய் உள்ளிட்ட அடிப் படை வசதிகளை நிறைவேற்ற வேண்டும். கால்நடை மருத்து வமனையை முழு நேர மருத்துவமனையாக மாற்ற வேண்டும். 100 நாள் வேலை திட்டத்தை முறையாக செயல்படுத்த வேண் டும். அனைத்து குடியிருப்புகளுக்கும் ஒகேனக்கல் கூட்டு குடி நீர் திட்டம் மூலம் குடிநீர் வழங்கிட வேண்டும். அரசு ஆரம்ப சுகா தார நிலையத்தில் உள்ள காலிப்பணியிடங்களை உடனடி யாக நிரப்ப வேண்டும்.  முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளி களுக்கு வழங்கக்கூடிய மாதாந்திர ஓய்வூதியத்தை முறை யாக வழங்கட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியு றுத்தி பென்னாகரம் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் சக்கரவேல் தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் அ.குமார், மூத்த தலைவர் பி.இளம் பரிதி, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் சிசுபாலன், வே. விசுவநாதன், ஆர்.சின்னசாமி, வி.ரவி, ஒன்றிய செயலா ளர் ஜி.சக்திவேல், மாவட்டக்குழு உறுப்பினர்கள் ஆ.ஜீவானந் தம், எம்.குமார், சி.ராஜி, கே.அன்பு ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர்.  இடைக்குழு உறுப்பினர் வாஞ்சி நாதன் நன்றி தெரிவித்தார்.