சேலம், ஜூன் 15- மேட்டூர் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் நூற்பாலையின் 3.50 கோடி வரி பாக்கி வைத்துள்ளதை கண்டித்தும், பாக் கியை முழுமையாக வசூலிக்க வேண்டும் என வலியுறுத்தியும் மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சேலம் மாவட்டம், மேட்டுரில் செயல்பட்டு வரும் தனியார் நூற்பாலை கடந்த 25 ஆண்டு களாக நகராட்சிக்கு செலுத்த வேண்டிய எந்த வரியையும் செலுத்தவில்லை. இதனால், சுமார் ரூ.3 கோடியே 36 லட்சத்திற்கும் மேல் வரி பாக்கி உள்ளது. இந்நிலையில், மேட்டூர் நகராட்சி நகர்மன்ற தலைவர் தலைமையிலான வரி மேல்முறையீட்டு குழு தன்னிச்சையாக சுமார் ஒரு கோடியே 75 லட்சம் ரூபாய் வரியை தள்ளுபடி செய்துள் ளது. இது மேட்டூர் நகராட்சிக்கு ஈடு செய்ய முடியாத மிகப்பெரிய இழப்பாகும். இந்த வரி குறைப்பு செய்ய மிகப்பெரிய தொகை கையூட் டாக பெற்றதாக கூறப்படுகிறது. மேட்டூர் நக ராட்சி நிர்வாகம் போதிய வருவாய் இல்லா மல் சிரமமான நிலையில் செயல்பட்டு வரு கிறது. தூய்மை பணியாளர்கள் உட்பட பணி யாளர்கள், அலுவலர்களுக்கு மாதாந்திர ஊதியம் வழங்கக்கூட முடியவில்லை என கூறப்படுகிறது. மேட்டூர் நகராட்சியில் பணி யாற்றி மரணமடைந்தவர்கள் மற்றும் ஓய்வு பெற்றவர்கள் என 40க்கும் மேற்பட்டவர் களுக்கு பணப்பயன்கள் எதுவும் கிடைக் காமல், வாழ்க்கை நடத்த முடியாமல் சிரமத் திற்குள்ளாகி வருகின்றனர்.
தற்போது பணியில் உள்ள தொழிலாளர் களின் மாதாந்திர ஊதியத்தில் பிடித்தம் செய்த தொகை சுமார் ரூ.40 லட்சம், தொழி லாளர்களின் கடன் சொசைட்டியில் செலுத்தா மல் உள்ளது. இவ்வாறு நகராட்சிக்கு பல லட் சம் ரூபாய் நிதி தேவை உள்ள நிலையில் நகர் மன்ற தலைவர் உள்ளிட்ட மேல்முறையீட்டு குழு தனது பொறுப்பை உணர்ந்து செயல் படாமல் இந்த வரி தள்ளுபடி செய்திருப்பது பல சந்தேகங்களுக்கு இடமளிப்பதாக உள் ளது. மக்கள் மத்தியில் கையூட்டு பெற்றதாக பரவலாக பேசப்படுகிறது. தமிழ்நாடு அரசு, இதில் தலையிட்டு உயர்மட்ட விசாரணை நடத்த வேண்டும். தனியார் நூற்பாலைக்கு தள்ளுபடி செய்த வரி தொகையை உடனடி யக வசூல் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேட்டூர் நகராட்சி அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், கட்சியின் மாவட்ட செயலாளர் மேவை.சண்முகராஜா, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஆர். வெங்கடபதி, எம்.குணசேகரன், வி. இளங்கோ, மேட்டூர் - கொளத்தூர் ஒன்றிய செயலாளர் எஸ்.வசந்தி, மாவட்டக்குழு உறுப் பினர் எஸ்.எம்.தேவி, சி.கருப்பண்ணன் உட் பட திரளானோர் கலந்து கொண்டனர்.