ஈரோடு, ஜூன் 28- பவானி அருகே புன்னம் ஊராட்சியில் பாதுகாக்கப்பட்ட குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கேட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் புன்னம் ஊராட்சி மன்ற அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஈரோடு மாவட்டம், புன்னம் ஊராட்சியில் பவானி ஆற்றி லிருந்து பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க வேண்டும். கால் நடைகளின் பராமரிப்பை கவனத்தில் கொண்டு மையமான பகுதியில் கால்நடை மருத்துவமனை அமைக்க வேண்டும். நல்லா நாயக்கனூர், வேலாமரத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் கிணறுகளில் கம்பி வலை அமைத்து குழந்தைகள் தவறி விழுவதைத் தடுக்கும் வகையில் பாதுகாப்பு செய்ய வேண் டும். பட்டியலின மக்களுக்கு மயான வசதி செய்து கொடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. கிளைச் செயலாளர் எம்.பெத்தநாயக் கர் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.பி.பழனிசாமி, தாலுகாச் செயலாளர் எஸ்.மாணிக்கம், மாவட்டக் குழு உறுப்பினர் ஏ.ஜெகநாதன் ஆகியோர் சிறப்புரை யாற்றினர். இந்திராணி, சின்னுசாமி உள்ளிட்ட திரளானோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.