கோவை, பிப்.7- மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ,கோவையில் நடைபெறும் “கண்டன ஆர்ப்பாட்டத்தில், ஒருங்கி ணைந்த கோவை மாவட்ட திமுகவிற்கு உட்பட்ட, “அனைத்துக் கழக நிர்வாகி கள் -அனைத்து கழக உடன்பிறப்புக் கள் பெருந்திரளாய் பங்கேற்க வேண் டும் என ஒருங்கிணைந்த கோவை மாவட்ட திமுக மாவட்ட செயலாளர் கள் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர். கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக், கோவை வடக்கு மாவட்டச் செயலாளர் தொ. அ.ரவி, கோவை தெற்கு மாவட்டச்செ யலாளர்தளபதி முருகேசன் ஆகி யோர் வெளியிட்டுள்ள கூட்டறிக்கை யில் கூறியிருப்பதாவது, மாநில உரிமை கள் காத்திட - ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்து, மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் (இன்று) 8 ஆம்தேதி வியாழனன்று மாலை 4 மணியளவில், கோவை சிவானந்தா காலனி, பவர் ஹவுஸ் முன்புறம் கண்டன ஆர்ப்பாட் டம் நடைபெற உள்ளது. இந்த “கண்டன ஆர்ப்பாட்டத்தில்” தமிழ்நாடு முதல மைச்சர் கழகத் தலைவர் ஆணைக்கி ணங்க, ஒருங்கிணைந்த கோவை மாவட்ட திமுகவிற்கு உட்பட்ட மாவட் டக் கழக நிர்வாகிகள், தலைமைக் கழக நிர்வாகிகள், மேயர், துணை மேயர், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், நகரக் கழக ஒன்றியக் கழக,பகுதிக் கழக, பேரூர்க் கழக, வட் டக்கழகச் செயலாளர்கள், அனைத்து உள்ளாட்சிப் பிரதிநிதிகள், அனைத்து அணிகளின் தலைவர்கள், அமைப்பா ளர்கள் அனைவரும் தவறாமல் பெருந் திரளாகக் கலந்து கொண்டு, ஒன்றிய பாஜக அரசிற்கு எதிராக கண்டனக் குரலை எழுப்பிடவேண்டும் என வலி யுறுத்தியுள்ளனர்.