districts

img

கற்பூர வாசனை அறியாதவர், மார்க்சை சிறுமைப்படுத்துவதா?

சேலம், பிப்.22- மனித குல விடியலின் மகத்தான தத்து வத்தை உலகிற்கு அளித்த, காரல் மார்க்சின் சிந்தனையை, கற்பூர வாசனை அறியாத ஆளுநர் ஆர்.என்.ரவி சிறுமைப்படுத்தியதை கண்டித்து சேலத்தில் மார்க்சிஸ்ட் கட்சி யினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சேலம் சிபிஎம் மாவட்ட குழு அலுவல கம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, சிபிஎம் சேலம் மாவட்ட செயலாளர் மேவை. சண்முகராஜா தலைமை ஏற்றார்.  ஆர்ப்பாட் டத்தில் தலைவர்கள் பேசுகையில், தமிழ்நாடு  மக்களின் நலனுக்கு எதிராகவும், தமிழக சட்ட மன்றம் ஏகமனதாக நிறைவேற்றிய ஆன் லைன் ரம்மி, நீட்விலக்கு மசோதா உள் ளிட்ட தீர்மானங்களை கையெழுத்து இட நேர மில்லாமல் கோப்புகள் மீதேறி அமர்ந்திருக் கிறார். ஆனால், கற்பூர வாசனை அறியாமல், அறிவு போதாமையில், காரல் மார்க்ஸ் குறித்து சிறுமைப்படுத்தி ஆளுநர் பேசியுள்ளது வன் மையான கண்டனத்திற்குரியது. சர்ச்சைக் குரிய கருத்தை தெரிவித்ததை திரும்பப் பெற  வேண்டும். இல்லையெனில், மாவட்டம் முழு வதும் முழுவதும் மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் எழுச்சியோடு நடை பெறும், என்றனர். முன்னதாக இந்த ஆர்ப்பாட்டத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.வெங்கடபதி மற் றும் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள், மாவட்டக்குழு உறுப்பினர்கள் திரளானோர் பங்கேற்றனர்.