சேலம், ஜூலை 28- அரசு நிலத்தை ஆக்கிரமிப்பு செய் தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியினர் வாழப்பாடி வட் டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். சேலம் மாவட்டம். எம்.பெருமா பாளையம் பஞ்சாயத்தில் வனத் துறைக்கு சொந்தமான நிலங்களை தனி நபர் ஆக்கிரமித்துள்ள மீட்க வேண்டும். கோதுமலை அடிவாரத் தில் இருந்து செட்டிநாடு வரை உள்ள நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றி நீர் நிலையை பாதுகாக்க வேண்டும். கொண்டப்பன் நாயக்கன் கரடு பகுதி யில் உள்ள அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்த வர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், ஆக்கிரமிப்புக்காக பயன்படுத்திய ஜேசிபியை பறி முதல் செய்ய வேண்டும். ஆக்கிர மிப்பில் ஈடுபட்டவர்கள் மட்டுமின்றி, துணை போன அதிகாரிகள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தாலுகாக்குழு உறுப்பினர் கே. ராஜா தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், தாலுகாச் செய லாளர் வி.தங்கவேல், மாவட்ட செயற் குழு உறுப்பினர் ஜி.கணபதி ஆகி யோர் உரையாற்றினர். இதில் தமிழ் நாடு விவசாய சங்க தாலுகா தலை வர் வி.பழனிமுத்து, மாவட்டத் தலை வர் ஏ.அன்பழகன் உள்ளிட்ட திரளா னோர் பங்கேற்றனர்.