districts

img

வேகத்தடை அமைக்கக்கோரி சிபிஎம் மனு

அவிநாசி, பிப்.2- அவிநாசி அருகே காசி  கவுண்டன் புதூர் பேருந்து நிறுத்தம் அருகே வேகத் தடை அமைக்கக்கோரி மார்க்சிஸ்ட் கட்சி சார்பில்  கோரிக்கை மனு அளிக்கப் பட்டது. அவிநாசி ஒன்றியம், வேலாயுதம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட மங்கலம் சாலையில் காசிகவுண்டன் புதூர் பேருந்து நிறுத்தம் நான்கு வழி சாலையாக அமைந்துள்ளது. இச்சாலையில், கனரக வாகனம் முதல் இரு  சக்கர வாகனம் வரை நாள்தோறும் நூற்றுக் கணக்கான வாகனங்கள் சென்று வருகின் றன. அதேநேரம், இச்சாலையில் வேகத் தடை அமைக்கப்படாததன் காரணமாக வாகனங்கள் அதிவேகத்தில் செல்வதால் அவ்வப்போது வாகன விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன.  ஆகவே, காசி கவுண்டன் புதூர் பேருந்து  நிறுத்தம் அருகே வேகத்தடை அமைக்கக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பாரதி நகர் கிளை சார்பில் நெடுஞ்சாலைத்துறை அலுவலரை சந்தித்து கோரிக்கை மனு  அளிக்கப்பட்டது.  இம்மனுவைப் பெற்றுக்  கொண்ட அதிகாரிகள், இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி யளித்தார். முன்னதாக, இந்த மனுவினை மார்க்சிஸ்ட் கட்சியின் ஒன்றியகுழு உறுப்பி னர்கள் ஜெ.ரமேஷ், ஏ.ராஜன், ஆர்.மணி,  கே.மணி ஆகியோர் அளித்தனர்.