districts

img

தோட்டத்துப்பாளையம் குடிநீர் பிரச்சனை மண்டல அலுவலகத்தில் சிபிஎம் மனு

திருப்பூர், ஜூலை 1 - திருப்பூர் மாநகராட்சி நெருப்பெரிச்சல் அருகே தோட்டத் துப்பாளையம் பகுதியில் குடிநீர் பிரச்சனைக்குத் தீர்வு காண  வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் இரண்டா வது மண்டல அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்த னர். திருப்பூர் நஞ்சப்பா நகரில் உள்ள இரண்டாவது மண்டல  அலுவலகத்தில் வியாழக்கிழமை இந்த மனு அளிக்கப்பட் டது. கட்சியின் தோட்டத்துப்பாளையம் கிளைச் செயலாளர்  மங்கலட்சுமி உள்ளிட்ட பெண்கள் அளித்த மனுவில் கூறியி ருப்பதாவது, தோட்டத்துப்பாளையம் பகுதியில் கடுமையான குடிநீர்  தட்டுப்பாடு நிலவுகிறது. பல நாட்களாக குடிநீர் விநியோகம்  நடைபெறாததால் அப்பகுதி மக்கள் கடும் சிரமப்படுகின் றனர். எனவே இப்பிரச்சனைக்குத் தீர்வு காண்பதுடன், சீராக  குடிநீர் விநியோகம் செய்வதையும் மாநகராட்சி நிர்வாகம் உத்தரவாதம் செய்ய வேண்டும் என்று இந்த மனுவில் வலியு றுத்தப்பட்டது. மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர்கள் ஆர். மைதிலி, ஆ.சிகாமணி, கட்சியின் ஒன்றியக்குழு உறுப்பி னர்கள் சி.பானுமதி, பாண்டியன் மற்றும் மூத்த உறுப்பினர்  கணேசன் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர்.