திருப்பூர், ஜூலை 13 – திருப்பூர் மாநகரம் ஓடக்காடு பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் கிளை அலுவலகக் கட்டிடம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டு விழா வியாழனன்று நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் வடக்கு மாநகரக்குழுவுக்கு உட்பட்ட ஓடக்காடு கிளை அலுவலகத் திற்கு ஓடக்காடு பகுதியில் இடம் வாங்கப்பட்டிருந்தது. அங்கு புதிய கிளைக் கட்டிடம் கட்டுவதற்கு நடைபெற்ற அடிக்கல் நாட்டு விழாவில் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் கே. காமராஜ், மாநகரச் செயலாளர் பி.ஆர்.கணேசன், முன் னாள் மாநகரச் செயலாளர் என்.கோபாலகிருஷ்ணன் மற்றும் தமுஎகச மாநில செயற்குழு உறுப்பினர் ஆர்.ஈஸ்வரன், கட்சி யின் மாநகரக்குழு உறுப்பினர் கே.நாகராஜ் ஆகியோர் பங்கேற்றனர். அத்துடன் ஓடக்காடு கிளைச் செயலாளர் சிவசண்முகம், காலேஜ் ரோடு கிளைச் செயலாளர் சின்னச்சாமி, மூத்த உறுப் பினர்கள் சபுரோ ரங்கசாமி, கே.ஜி.துரைசாமி, டி.பொன்னு சாமி, முருகேசன், ஏ.சங்கர் உள்பட பலர் இதில் பங்கேற்ற னர்.