திருப்பூர், செப்.1 - திருப்பூர் மாநகராட்சி பள்ளிகளில் தூய்மை பணி செய்யும் தூய்மை பணியாளர் களுக்கு காலதாமதம் செய்யாமல் உடனடி யாக மாநகராட்சி நிர்வாகம் ஊதியம் வழங்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்டக்குழு வலியு றுத்தி உள்ளது. இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்டச் செயலாளர் செ. முத்துக்கண்ணன் வெள்ளியன்று விடுத் துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திருப்பூர் மாநகராட்சி பள்ளிகளில் தூய் மைப் பணியில் ஈடுபடுத்தப்படும் தூய்மை பணியாளர்களுக்கு இரண்டு மாத கால மாக ஊதியம் வழங்கப்படவில்லை. குறைந்த ஊதியமான மாதம் ரூ.4ஆயிரம் வழங்கப் படும் சூழலில், மாவட்ட முதன்மை கல்வி அலு வலகத்தில் இருந்து வருகை பதிவேடு கிடைக் கவில்லை என்று மாநகராட்சி நிர்வாகம் கார ணம் கூறி, ஊதியம் தராமல் இருப்பதாகத் தெரிய வந்துள்ளது. இது எந்த வகையிலும் ஏற்புடைதயல்ல. தூய்மைப் பணியாளர்க ளுக்கு நிலுவையில் உள்ள ஊதியத்தை உட னடியாக மாநகராட்சி நிர்வாகம் வழங்க வேண்டும். மாநகராட்சி நிர்வாகமும், முதன்மை கல்வி அலுவலகமும் தூய்மைப் பணியாளர்களுக்கு ஊதியம் வழங்குவதில் இதுபோல் காலதாமதம் செய்வது வருந் தத்தக்கது. இந்த போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திருப்பூர் மாவட்டடக்குழு சார்பில் முத்துக் கண்ணன் கூறியுள்ளார்.