கோவை, ஏப்.28- கோவை மாவட்டத்தில், குடிநீர் குழாய் பதிப்பதற்காக தோண்டப் பட்ட சாலையை செப்பனிடக் கோரி யும், சாக்கடை கால்வாய் உடைப்பு களை சீரமைக்க வலியுறுத்தியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாமன்ற உறுப்பினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டார். கோவை மாநகர வடக்கு மண்ட லத்திற்குட்பட்ட 28ஆவது வார்டு ஆவாரம்பாளையம் பகுதியில், தனியார் சூயஸ் நிறுவனம் சார்பில் குடிநீர் குழாய் பதிப்பதற்கு சாலையில் குழி தோண்டப்பட்டன. இதனால், சாலையில் ஆங் காங்கே பள்ளங்கள் ஏற்பட்டன. மேலும், சாக்கடை கால்வாய்கள் இடிக்கப்பட்டதால் கழிவுநீர் சாலையில் செல்கிறது. இதுகுறித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 28ஆவது வார்டு உறுப்பினர் கண்ணகி ஜோதி பாசு, சூயஸ் நிறுவன அலுவலம் இயங்கும் மாநகராட்சியில் உள்ள சூயஸ் நிறுவன அதிகாரிகளிடம் சந்தித்து சாலையை செப்பனிட வலியுறுத்தினார். மேலும், இச்சாலைகளை ஓராண்டுக்கு முன்பே தோண்டப் பட்டது. இதனால், இச்சாலையில் பயணிக்கும் பொதுமக்கள், பள்ளி செல்லும் மாணவர்கள் உள்ளிட்ட பலரும் பாதிப்புக்குள்ளாகினர். இதுகுறித்து, அவ்வப்போது சூயஸ் நிறுவனம் அதிகாரிகளிடம் தெரி வித்தால், சாலையை சீரமைக் காமல் கால தாமதம் ஏற்படுத்தி, முறையான பதில் அளிக்காமல் தவிர்த்து வந்தனர். மேலும், இந்த சாலை குறித்து எவ்வித புகார்களும் வரவில்லை என சூயஸ் நிறுவன அதிகாரிகள் மற்றும் மாநகராட்சி அதிகாரி களும் மழுப்பலாக பதில் அளித் தனர். இதனால் ஆவேசமடைந்த 28ஆவது வார்டு உறுப்பினர் கண்ணகி ஜோதிபாசு, மாநகராட்சி அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டார். இந்நிலையில், காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட மாமன்ற உறுப்பினர் கண்ணகி ஜோதி பாசுடன், சூயஸ் நிறுவன அதிகாரி கள் மற்றும் மாநகராட்சி அதிகாரி கள் பேச்சுவார்த்தையில் ஈடு பட்டனர். இந்த பேச்சுவார்த்தை யில், தோண்டப்பட்ட சாலையை நேரில் ஆய்வு செய்து, சீரமைக்கப் படும். இதற்கான பணிகளை தற் போது துவங்கி சில தினங்களில் முடிக்கப்படும் என வாக்குறுதி அளித்தனர். இதையடுத்து, காத்திருப்பு போராட்டம் தற்காலிகமாக விலக்கி கொள்ளப்பட்டது. இந்த பேச்சுவார்த்தையின் போது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 12ஆவது வார்டு உறுப் பினர் வெ.ராமமூர்த்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பீளமேடு நகரக் குழு உறுப்பினர் ஜோதிபாசு ஆகியோர் கலந்து கொண்டனர்.