திருப்பூர், பிப்.20 - திருப்பூர் மாநகராட்சி 25ஆவது வார்டுக்கு உட்பட்ட குடியிருப்புப் பகுதி களுக்குச் செல்லும் சாலையை அடைக்க ரயில்வே நிர்வாகம் நடவ டிக்கை எடுத்து வரும் நிலையில், பாதிக் கப்படும் அப்பகுதி மக்களை மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் நேரில் சந்தித்துப் பேசி, அந்த இடத்தை ஆய்வு செய்தனர். திருப்பூர் வஞ்சிபாளையம் சாலை யில் அணைப்பாளையத்தின் மேற்குப் பகுதியில், அப்பல்லோ அகரம் அவென்யூ, அருள்ஜோதி நகர், ரத்தி னபுரி கார்டன் ஆகிய குடியிருப்புகளில் வீடுகள் மற்றும் தொழிற்சாலைகள் உள் ளன. இப்பகுதிகளுக்கு வஞ்சிபாளை யம் சாலையில், ரயில்வே இருப்புப் பாதையின் கீழே உள்ள நீர்வழித் தடத் தில் சிறு பாலம் வழியாக மண் சாலை யில் தான் போய் வர முடியும். இந்நிலை யில், ரயில்வே துறையினர் கடந்த சில நாட்களாக இந்த மண்சாலையை அளந்து, வேலி அமைப்பதற்கு அள வீட்டுக் கல் வைத்துள்ளனர். இதை தொடர்ந்து, அப்பகுதி தனித்தீவாக மாற் றக்கூடிய நிலை ஏற்படும் என அஞ்சும் மக்கள் மார்க்சிஸ்ட் கட்சியினரிடம் முறையிட்டனர். இதையடுத்து மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேலம்பா ளையம் நகரச்செயலாளர் ச.நந்தகோ பால் தலைமையில் பிப்ரவரி 14ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் தா.கிறிஸ்து ராஜை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். இந்நிலையில், வியாழனன்று மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநி லக்குழு உறுப்பினர் கே.காமராஜ், மாவட்டச் செயலாளர் சி.மூர்த்தி, மாவட் டச் செயற்குழு உறுப்பினர் கே.ரங்க ராஜ், வேலம்பாளையம் நகரச்செயலா ளர் ச.நந்தகோபால், நகரக்குழு உறுப்பி னர் அ.உமாநாத், ப.செல்வி ஆகியோர் இப்பகுதிக்கு நேரில் சென்று ஆய்வு செய்தனர். அங்குள்ள மக்களிடமும் இப் பிரச்சனை தொடர்பாக கேட்டறிந்தனர். இப்பிரச்சனைக்கு உரிய நிரந்தர தீர்வு காண அரசை வலியுறுத்துவதாகவும் உறுதியளித்தனர்.