districts

img

அடிப்படை பிரச்சனைகளை தீர்வு கோரி மண்டல அலுவலகத்தை சிபிஎம் முற்றுகை

திருப்பூர் ஜூலை 19-  திருப்பூர், திலகர் நகர் பகுதியில் அடிப்படை கோரிக்கை களை நிறைவேற்ற வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யினர் மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு அளித்த னர். திருப்பூர் மாநகராட்சி 11ஆவது வார்டு திலகர் நகர்  பகுதியில், ஆண்டுக்கணக்கில் தோண்டிப் போட்ட சாலை களை உடனடியாக, தரமான தார்ச் சாலையாக அமைத்திட வும், சாக்கடை கால்வாய்களைத் தூர்வாரி, அந்தக்கழிவு களை உடனடியாக அப்புறப்படுத்திடவும், இடிந்து  கிடக்கும் வடிகால்களைக் கட்டியும், கழிவுநீர் தேங்கி நிற்கும் வடிகால்களை சரி செய்து தரவும், பல இடங்களில் குழாய்கள் உடைந்து, குடிநீர் வீணாகிக் கொண்டிருப்பதை உடனடியாக சரி செய்திடவும், பாதாளச் சாக்கடைத் திட்டத்தில் விடுபட்ட பகுதிகளையும் இணைத்திடவும் வலியுறுத்தி இந்த முற்றுகை போராட்டம் நடத்தப்பட்டது. செவ்வாயன்று காலை, முதலாம் மண்டல அலுவலகத் தில் நடத்தப்பட்ட இந்த போராட்டத்தில், கட்சியின் நகரச் செய லாளர் ச.நந்தகோபால், நகரக் குழு உறுப்பினர்கள் பி.சின்னச் சாமி, பி.நவபாலன், அ.உமாநாத், ர.கவிதா, பி.ரகுபதி, கிளைச் செயலாளர்கள் சாந்தி, கலாதரன், ப.செல்வி, மூத்த தோழர் வி.பி.சுப்பிரமணியம் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். மாநகராட்சி இணைப் பொறியாளர் பிரபாகரன் உள்ளிட்ட அதிகாரிகளுடன் நடத்திய பேச்சுவார்த்தையில், ஆக. 10 ஆம்தேதிக்குள் திலகர் நகர் முதன்மைச் சாலையை தார்ச் சாலையாக அமைத்துத் தருவதாகவும், கழிவுநீர்க் கால்வாய் களை புதன் அன்று நேரில் வந்து ஆய்வு செய்து, சரி செய்வ தாகவும், குப்பைகளை அகற்றவும், உடைந்து, வீணாகும் குடி நீர்க் குழாய்களை சரி செய்திடவும் உறுதியளித்தனர். அதன் பேரில், முற்றுகைப் போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட் டது.  உறுதி அளித்தபடி திலகர் நகரில் இணைப் பொறியா ளர் பிரபாகரன் உள்ளிட்ட அதிகாரிகள் புதன் அன்று நேரில் ஆய்வு செய்து, இரண்டு வீதிகளில் இடிந்து கிடக்கும் கழிவு நீர் வடிகால்களை முழுவதுமாகக் கட்டித்தர ஆவணச் செய்வதாக கூறினார். கோரிக்கைகளை முழுவதுமாக நிறைவேற்றாவிட்டால் மீண்டும் போராட்டம் நடத்தப்படும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் தெரிவித்தனர்.