districts

சிபிஎம் தலையீடு: வீட்டை இடிக்கும் டிஆர்ஓ உத்தரவு ரத்து

ஈரோடு, மார்ச் 2- மார்க்சிஸ்ட் கட்சியின் முயற்சியால் கொடுமுடி வட்டம், சிவகிரி பகுதியில் உள்ள  ஏழை கணேசன் வீட்டை இடிக்கும் டிஆர்ஓ  உத்தரவு ரத்து செய்யப்பட்டு, பட்டா வழங்க வும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஈரோடு மாவட்டச் செயலாளர் ஆர்.ரகுராமன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது, ஈரோடு மாவட்டம், கொடுமுடி வட்டம் சிவகிரி பட்டேல் வீதியில்  கணேசன் என்பவர், சிவகிரி “இ” கிராமம் நத்தம் ரீ. ச. 1668/14 ல் சுமார் ஐம்பது ஆண்டு களுக்கு மேல் வீடு கட்டி குடியிருந்து வந் தார். இது நத்தம் புறம் போக்கு ஆகும். கணே சன் வீட்டின் அருகில் அதிமுக பிரமுகரும், மணல் வியாபாரியுமான சந்திரசேகரன் என்ப வர் பங்களா கட்டி குடியிருந்து வந்தார். அவ ரது வீட்டிற்குக் கார் செல்வதற்கு இடைஞ் சலாக இருக்கிறது என்றும், தனது வீட்டின் அருகில் ஓட்டு வீடு இருப்பது அவமானம் என்று கருதி, கணேசன் வீட்டை இடித்து விட  முடிவு செய்தார்.  இதனையடுத்து, சந்திரசேகரன் தனது  செல்வாக்கை பயன்படுத்தி  தனது மனைவி யின் சகோதரி கிருஷ்ணவேணி பெயரில் புகார் கொடுத்தார். கிருஷ்ணவேணி வீடு சின் னியகவுண்டம்பாளையம் பகுதியில் உள் ளது. சந்திரசேகரன் தூண்டுதல் பேரில், கிருஷ்ணவேணி நத்தம் சர்வே எண் 1668/14ஐ ஆக்கிரமிப்பு செய்து கணேசன் வீடு கட்டி  விட்டார் என்றும், அந்த வீட்டை இடித்து  அகற்றவும் அன்றைய மாவட்ட ஆட்சியர்/  (அதிமுக செயலாளர் போல் செயல்பட்டவர்) மூலம் மனு கொடுத்தார்.  கொடுமுடி வட்டாட்சியர், ஈரோடு கோட் டாட்சியர் மற்றும் ஈரோடு மாவட்ட வருவாய் அலுவலர் மூலம் கணேசன் குடியிருந்த வீட்டை இடித்து அகற்ற நோட்டீஸ் கொடுத் தனர். தமிழ்நாடு நில ஆக்கிரமிப்பு சட்டப் பிரிவுகள் படி கொடுக்கப்பட்ட நோட்டீஸ்க ளுக்கு கணேசன்  விளக்கம் அளித்தார். 50  ஆண்டுகள் வீடு கட்டி குடியிருந்து வருவ தாகவும், சிவகிரி பேரூராட்சிக்கு வீட்டு வரி செலுத்தி வருவதாகவும், ஆதார் அட்டை, குடும்ப அட்டை, மின்சாரம் பெற்று முறை யாக பயன்படுத்தி வருவதாகவும் விளக்கம் அளித்த போதும், அரசு விதிகள் மற்றும் நீதி மன்றம் தீர்ப்புகள் படி நத்தம் என்பது வீடு கட்டி குடியிருப்பதற்கான புறம்போக்கு என்று  கூறிய போதும் அன்றைய ஆளும் கட்சியினர் உத்தரவை ஏற்று கணேசன் குடியிருந்த வீட்டை இடித்து அகற்ற மாவட்ட வருவாய் அலுவலர் உள்ளிட்ட அதிகாரிகள் உத்தர விட்டனர்.  ஆட்சியில் இருப்பவர்களை மகிழ்விக்க அதிகாரிகள் தொடுத்த இந்த தாக்குதல் குறித்து, மார்க்சிஸ்ட் கட்சியின் உதவியை பெரியவர் கணேசன் நாடினார். இதனைத் தொடர்ந்து தகவல் அறியும் உரிமை சட்டத் தின் மூலம் மார்க்சிஸ்ட் கட்சியின் கே.பி.கனக வேல், சசி மற்றும் மா.அண்ணாதுரை ஆகி யோர்  தகவல்கள் பெற்று சென்னை உயர் நீதி மன்றத்தில் வழக்கு தொடுக்க உதவினர்.

இதற் கிடையில், நத்தம் புறம் போக்கில் வீடு கட்டி  குடியிருந்து வந்த கணேசன் மற்றும் அவரது மனைவி ராமாயம்மாள் ஆகிய இருவரும் இறந்து விட்டனர்.  அந்த வழக்கில் கடந்த மாதம் 14.2.2024 அன்று தீர்ப்பு வழங்கப்பட் டது.  எதிரி கிருஷ்ணவேணி மற்றும் அதிமுக மணல் வியாபாரி சந்திரசேகரன் ஆகியோர்  கொடுத்த அச்சுறுத்தல் மற்றும் அதிகாரிக ளின் பாரபட்சமான நிர்வாகத் தாக்குதல் கார ணமாக இருவரும் இறந்து விட்டனர். விசார ணையின் போதே வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் அதிர்ச்சியில் மயங்கி விழுந்து விட்டார். அதிகாரிகள் மற்றும் அர சியல்வாதிகள் கொன்று விட்டனர் என்றால் மிகையாகாது. அவர்கள் இறந்த பிறகு கணே சன் மகள் சந்திராவை வாரிசாக வழக்கில் சேர்த்து வாதாடி கடந்த பிப்.14 ஆம் தேதி நத் தம் புறம் போக்கில் வீடு கட்டி குடியிருந்து வருவதால், வருவாய் நிலை ஆணை எண்.21ன் படி இலவச வீட்டுமனை பட்டா கொடுக்க பரிசீலிக்க வேண்டும் என்றும், ஏற் கனவே மாவட்ட வருவாய் அலுவலர் ஆக்கிர மிப்பு என கணேசன் வீட்டை அகற்ற உத்தர விட்ட ஆணையை ரத்து செய்தும் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.  சட்ட விதிகளை மீறி ஆட்சியாளர்களை மகிழ்விக்க அரசு அதிகாரிகள் உடந்தையாக இருக்கக் கூடாது என்றும், சட்டப்படி செயல் பட வேண்டும் என்றும் அதிகாரிகளைக் கேட் டுக் கொள்கிறோம். மேலும், சந்திராவிற்கு ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுன் கரா வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும்  என்று மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் கேட் டுக் கொள்கிறோம் என தெரிவித்துள்ளார்.