districts

img

அடிப்படை வசதிக்கு ஏங்கும் தலித் மக்கள் கோரிக்கை நிறைவேற்ற சிபிஎம் வலியுறுத்தல்

உடுமலை, ஏப்.4- பல ஆண்டுகளாக அடிப் படை வசதியின்றி அவதிக் குள்ளாகும் தலித் மக் களின் கோரிக்கை நிறை வேற்றுமாறு மார்க்சிஸ்ட்  கட்சியினர் மாவட்ட ஆட்சி யரிடம் வலியுறுத்தினர்.  இதுகுறித்து சிபிஎம் ஜே.ஜே.நகர் கிளை செய லாளர் ஜான்கண்ணன், மாவட்ட ஆட்சி யரிடம் அளித்த மனுவில் கூறியிருப்ப தாவது, திருப்பூர் மாவட்டம், மடத்துக் குளம் தாலுகா, கொமரலிங்கம் பேரூராட் சிக்குட்பட்ட பொருமாள்புதூர் ஜெ.ஜெ நகர் காலனி கடந்த 2000 ஆம் ஆண்டு  கட்டப்பட்டது. இங்கு சுமார் 150க்கும் மேற்பட்ட  ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி யின மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் அடிப்படை வசதிகளான குடிநீர், சாக்கடை வசதிகள் போதுமானதாக இல்லை. இது குறித்து, பேரூராட்சி நிர்வா கத்திற்கு பல முறை கோரிக்கை விடுத்தும்,  இதுவரை எவ்வித நடவடிக்கை எடுக்கப்பட வில்லை. மேலும், இப்பகுதிக்கான ரேசன் கடைக்கு  சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள  பெருமாள்புதூருக்கு சென்று பொருட்கள் வாங்க வேண்டும். எனவே, ஜெ.ஜெ.நகர்  பகுதியே ரேசன் கடை அமைக்க வேண்டும்.  இப்பகுதியை சேர்ந்த ஐம்பதுக்கும் மேற் பட்ட குழந்தைகள் அங்கன்வாடி சென்று வரு கின்றனர். இப்பகுதியே புதிதாக அங்கன் வாடி மையம், சமுதாய கூடம் கட்டி தர வேண்டும் என தெரிவித்துள்ளார்.