திருப்பூர், ஜூன் 9 - திருப்பூர் 14 ஆவது வார்டுக்குட்பட்ட பெரியார் காலனி நியாயவிலை கடை யில் பொருட்களை முறையாக வினியோ கம் செய்ய வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம் யூனிஸ்டு கட்சியின் சார்பில் வியாழ னன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட பகு திகளில் உள்ள நியாயவிலை கடைக ளில் ஊழியர் பற்றாக்குறை காரண மாக 2 கடைகளுக்கு ஒரு ஊழியர் என்ற முறையில் பணியாற்றி வருகின்றனர். இதனால் கடைளை தினமும் திறப்ப திலும், பொருட்களை முறையாக வினி யோகம் செய்வதிலும் சிரமம் ஏற்பட்டு வருகிறது. பெரியார்காலனி நியாய விலை கடையிலும் இதே பிரச்சனை நிழ வுகிறது. இந்நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் வேலம்பாளை யம் நகரகுழு உறுப்பினர் கவிதா தலைமையில் முறையாக பொருட் களை வினியோகம் செய்ய வலியு றுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ரங்கராஜ், நகர செயலாளர் நந்தகோபால், நகர குழு உறுப்பினர் பாபு, உமாநாத், கிளை செயலாளர் ஜார்ஜ் வர்கீஸ் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசி னார்கள். ஆர்ப்பாட்டத்தின் போது தின மும் ரேசன் கடையை திறந்து பொதுமக் களுக்கு தேவையான பொருட்களை முறையாக வினியோகம் செய்ய வேண் டும். தேவையான ஊழியர்களை உடன டியாக நியமனம் செய்ய வேண்டும். கோதுமை, மண்எண்ணெய் ஆகிய வற்றை மத்திய அரசு முறையாக வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டது. மேலும் திருப் பூர் வளர்மதி கூட்டுறவு நிர்வாகத்தை கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பப் பட்டது. முடிவில் முன்னாள் நகரமன்ற துணை தலைவர் சரோஜா நன்றி கூறி னார். இதில் கட்சி நிர்வாகிகள் உட்பட திரளான பொதுமக்கள் கலந்து கொண் டனர்.