தருமபுரி, ஜன.1- மிட்டாரெட்டி அள்ளி ஆதிதிராவிடர் மக்களுக்கு வழங்கப் பட்ட இலவச மனைபட்டாவுக்கான இடத்தை பட்டாதாரருக்கு அளந்து கொடுக்க வேண்டும் என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் நல்லம்பள்ளி வட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது. தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஒன்றியம், மிட்டாரெட்டி அள்ளி கிராமம் உள்ளது. இங்கு ஆதிதிராவிடர் மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 2018 ஆம் ஆண்டு இல வச மனைப்பட்டா வழங்கப்பட்டது. ஆனால், இதுவரை பட்டா வுக்கான இடம் அளந்து கொடுக்கப்படவில்லை. எனவே, பட்டாவுக்கான இடத்தில் வீடுகட்டும் தற்காகலிக இடத்தை அளந்து கொடுக்க வேண்டும் என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் நல்லம்பள்ளி வட்டாட்சியர் அலுவ லகத்தில் மனு அளித்தனர். இதில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற் குழு உறுப்பினர் எம்.முத்து, ஒன்றிய செயலாளர் சின்னராஜ், விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் எம்.சிவசந்தி ரன், மிட்டாரெட்டிஅள்ளி கிளை செயலாளர் செ.சின்னசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.