திருப்பூர், ஜூன் 24 – தொழிலாளர் நகரமான திருப்பூ ரில் பேருந்துகள் பற்றாக்குறை கார ணமாக வேலைக்கு வரக்கூடிய பல் லாயிரக்கணக்கான பயணிகள் ஒவ் வொரு நாளும் கடுமையாக அவதிப் படுகின்றனர். எனவே அரசுப் போக் குவரத்துக் கழகம் புறநகரப் பேருந் துகளை முழுமையாக இயக்கு வதற்கு உரிய நடவடிக்கையை மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள் ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் திருப்பூர் மாவட்டக்குழு கூட் டம் செவ்வாயன்று மாவட்ட செயற் குழு உறுப்பினர் சி.மூர்த்தி தலை மையில் நடைபெற்றது. இக்கூட் டத்தில் மாநில செயற்குழு உறுப் பினர்கள் என்.குணசேகரன், ஜி. சுகுமாரன், மாநிலக்குழு உறுப்பி னர் கே. காமராஜ், மாவட்ட செயலா ளர் செ.முத்துக்கண்ணன் உள்பட மாவட்ட குழு உறுப்பினர்கள் பங் கேற்றனர். இக்கூட்டத்தில் கீழ்க் கண்ட தீர்மானம் நிறைவேற்றப்பட் டது.
திருப்பூர் பழைய பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்பட்டு வந்த நகர்ப்புற உள்ளூர் பேருந்து கள் கொரோனா ஊரடங்கு காலத் தில் நிறுத்தப்பட்டது. ஊரடங்கு முடி வடைந்த நிலையில் மீண்டும் பேருந் துகளை இயக்க வேண்டிய போக்கு வரத்து துறை ஒவ்வொரு வழித்தடத் திலும் ஏற்கனவே இயங்கி வந்த பேருந்துகளை முழுமையாக இயக் காமல் நிறுத்திவிட்டது. இதனால் சுற்று வட்டார கிராமப்புறங்களில் இருந்து நகரத்திற்கு வந்து செல் லும் பயணிகள் மிகுந்த சிரமத் திற்கு உள்ளாகியுள்ளனர். கிராமப்புறங்களுக்கு இயக்கப் பட்ட பேருந்துகள் பெயரளவிற்கு வந்து செல்கின்றன. இதனால் பனி யன் தொழிற்சாலை மற்றும் இன்ன பிற பணிகளுக்கும் திருப்பூருக்கு வந்து செல்லும் தொழிலாளர்கள் மற்றும் பள்ளி, கல்லூரிகளுக்கு வந்துசெல்லும் மாணவர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வரு கின்றனர். பெட்ரோல் விலை உயர் வின் காரணமாக இரு சக்கர வாக னத்தையும் பயன்படுத்த முடியாத சூழ்நிலையில் பொது போக்குவ ரத்தை அதிகப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏற்கனவே அந்த வழித்தடத்தில் இயங்கி வந்த பேருந் துகள் அனைத்தையும் முழுமை யாக இயக்கும் வகையில் அரசுப் போக்குவரத்து நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு மாவட்ட நிர்வாகம் உடனடி யாக தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்டக்குழு கேட்டுக் கொண்டுள் ளது.