districts

img

சிபிஎம் முயற்சி: மழைநீர் வடிகால் கட்டுமான பணிகள் துவக்கம்

கோவை, ஜூன் 25- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரின் தொடர் முயற்சி மற்றும் கோவை நாடாளு மன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதி மூலம், ஜனதா நகர் பகுதியில் மழைநீர் வடிகால் கட்டுமான பணிகள் ஞாயிறன்று துவங்கியது. கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது, கோவை மாவட்டம், ஜனதா நகர் பகுதியில் வாக்குசேகரிப்பு பணியில் ஈடுபட்டிருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பி.ஆர். நடராஜன் எம்.பி.,யிடம், அப்பகுதி பொதுமக் கள், இப்பகுதியில் மழைநீர் வடிகால் இல்லா மல் சிரமமாக உள்ளது. நீங்கள் வெற்றி பெற்று உங்களின் தொகுதி மேம்பாட்டு நிதியிலி ருந்து மழைநீர் வடிகால் கட்ட நிதி ஒதுக்கி தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்த னர். ஆனால், கொரோனா காரணமாக இரண்டு ஆண்டுகளாக நாடாளுமன்ற உறுப்பினர் களின் தொகுதி மேம்பாட்டு நிதி நிறுத்தி வைக் கப்பட்டிருந்தது.

அதனைத்தொடர்ந்து ஜனதா நகரில் வசிக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, திமுக தலைவர்கள் 11 ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் சிவா தலைமையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை  நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடரா ஜனை, நேரில் சந்தித்து, மழைநீர் வடிகால் வசதிக்கு நிதி ஒதுக்கி தர வேண்டும் என்ற கோரிக்கை வைத்தனர். இந்நிலையில், அதற்கான மதிப்பீடு தயார் செய்து தந்ததின்பேரில், ஜனதா நகரில் மழைநீர் வடிகால் வசதி பணிகள் ஞாயிறன்று துவங்கியது. இந்நிகழ்வில், மாந கராட்சி மேயர் கல்பனா ஆனந்த்குமார், திமுக கோவை வடக்கு மாவட்ட செயலாளர் தொ.பா.ரவி, 11 ஆவது வார்டு மாமன்ற உறுப் பினர் சிவா, மார்க்சிஸ்ட் கட்சியின் 12 ஆவது மாமன்ற உறுப்பினர் வி.ராமமூர்த்தி, மாமன்ற  உறுப்பினர் பூங்கொடி சோமசுந்தரம், மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எஸ்.எஸ்.குளம் மேற்கு ஒன்றிய செயலாளர் சண்முகசுந்தரம் உட்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக, மழைநீர் வடிகால் கட்டுமானத் திற்காக ரூ.21 லட்சம் ஒதுக்கிய மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், இதற்கு உறுதுனையாக இருந்த சிபிஎம் 12 ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் வி.ராமமூர்த்தி, எஸ்.எஸ்.குளம் மேற்கு ஒன்றிய செயலாளர் எம்.சண்முகசுந்த ரம் ஆகியோருக்கு அப்பகுதி பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.

மேடை கட்டுமான பணிகள்: பி.ஆர்.நடராஜன் ஆய்வு

கோவை, கணுவாய் பேருந்து நிறுத் தம் அருகே பொது நிகழ்ச்சிகள் நடத்த நிரந்தர மேடை அமைத்துத்தர வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத் தனர். அதன்படி நாடாளுமன்ற உறுப்பி னர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து பி.ஆர்.நடராஜன் எம்.பி., நிதி ஒதுக்கீடு செய்தார். தற்போது அங்கு கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதை பி.ஆர். நடராஜன் ஆய்வு செய்து, தரமானதாக பணிகள் செய்யப்பட வேண்டும் என்று  கேட்டுக்கொண்டார். இதில், பன்னி மடை ஊராட்சி மன்ற தலைவர் ரத்தினம் மரு தாச்சலம், சோமையம்பாளையம் முன் னாள் துணைத்தலைவர் ஆனந்தகுமார், திமுக ஒன்றிய செயலாளர் குமார், மார்க் சிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் மோகன்ராஜ், சிஐடியு இன்ஜினியரிங் சங்க பொதுச்செயலாளர் துரைசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.