இளம்பிள்ளை, பிப்.8- இடங்கணசாலை நகராட்சி 9 ஆவது வார்டில் போட்டி யிடும் மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளர் ஏ.சீனிவாசனை பெரு வாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்வது என தேர்தல் பணிக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட் டது. சேலம் மாவட்டம், இடங்கணசாலை நகராட்சி 9 ஆவது வார்டில், திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஏ.சீனி வாசன் போட்டியிடுகிறார். இதைத்தொடர்ந்து, சிபிஎம் கே.கே.நகர் கிளைச் செயலாளர் கார்த்திக் தலைமையில் தேர்தல் பணிக்குழு அமைப்பு கூட்டம் நடைபெற்றது. இதில், சிபிஎம் வேட்பாளர் ஏ.சீனிவாசனை பெருவாரியான வாக்கு கள் வித்தியாசத்தில் வெற்றிபெற செய்வது என முடிவு செய்யப்பட்டது. முன்னதாக, இக்கூட்டத்தில் சிபிஎம் மாவட்ட செயலாளர் மேவை.சண்முகராஜா, தாலுகா செயலாளர் ஏ.ஆறுமுகம், சிஐடியு விசைத்தறி சங்க மாவட்ட உதவிச் செயலாளர் எஸ்.முத்துசாமி, மாதர் சங்க தாலுகா செயலாளர் வி. மோகனா, சிபிஐ மூத்த தலைவர் ஆர்.கே.ராமச்சந்திரன் உட் பட பலர் கலந்து கொண்டனர்.