districts

img

கண்ணில் கருப்புத்துணி கட்டி சிபிஎம் ஆர்ப்பாட்டம்

இராஜபாளையம் அக்.6-  இராஜபாளையம் நகராட்சி முடங்கியார் சாலையில் பெரிய பாலம் அருகே குடிநீர் வால்வு சரி செய்யும் பணிக்  காக தோண்டப்பட்ட பள்ளம் பல மாதங்களாக மூடப்படா மல் இருந்தது. இதுகுறித்து நகராட்சி நிர்வாகத்திற்கு பல முறை கவனப்படுத்தியும் சரி செய்யப்படவில்லை. மேலும் 9, 10,11,12 ஆகிய வார்டுகளில் பாதாள சாக்கடை தாமிரபரணி திட்டப் பணிகளுக்காக தோண் டப்பட்ட சாலைகள் சீர் செய்யப்படாமல் உள்ளது. அவற்றை சரி செய்ய வேண்டியும் வாரத்திற்கு ஒரு முறை  கொசு மருந்து அடிக்க வலியுறுத்தியும், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சம்பந்தபுரம் மற்றும் சீதக்காதி தெரு ஆகிய கிளைகளின் சார்பில் கண்களில் கருப்புத் துணி கட்டி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு நகர் குழு உறுப்பினர் முருகா னந்தம் தலைமை தாங்கினார். கிளைச் செயலாளர் பால  மஸ்தான் முன்னிலை வகித்தார். நகரச் செயலாளர் மாரி யப்பன் கோரிக்கைகளை விளக்கி பேசினார். சிஐடியு மாவட்ட துணை தலைவர் கணேசன் மற்றும்  நகர் குழு உறுப்பினர் சுப்பிரமணியன் உள்ளிட்ட ஏரா ளமானோர் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டம் நடைபெறும் போது பள்ளத்தை சீரமைப்பதற்கான பணிகள் துவங் கின.

;