districts

img

நூறுநாள் வேலை நாட்களை அதிகப்படுத்தக்கோரி சிபிஎம் ஆர்ப்பாட்டம்

கோவை, ஜுன் 1– தேசிய கிராமப்புற வேலை உறுதி திட் டத்தில் வேலை நாட்களை அதிகரிக்க வேண் டும் என வலியுறுத்தி கோவை சுல்தான் பேட்டையில் மார்க்சிஸ்ட் கட்சியினர் ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். ஒன்றிய அரசு கடுமையாக உயர்த்தி யுள்ள பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு  விலைகளை குறைக்க வேண்டும். பொதுத் துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்கக் கூடாது. நூறுநாள் வேலை திட்டத்தின்  வேலை நாட்களையும், தினக்கூலியை அதி கப்படுத்த வேண்டும். விவசாயத்தை கார்ப்பரேட் கம்பெனிகள் கொள்ளை யடிக்க திட்டங்களை வகுக்கும் ஒன்றிய பாஜக அரசை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியினர் கோவையில் ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர். சுல்தான் பேட்டை பேருந்து நிறுத்தம் ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், சூலூர் தாலுகாக்குழு உறுப்பினர்கள் பார்த்தசாரதி, ரவிந்திரன், விதொச நிர்வாகி ரங்கநாதன் ஆகியோர் உரையாற்றினர். இதில், சிபிஎம் கிளை செய லாளர்கள் வடவள்ளி செல்வராஜ், லட்சுமி நாய்க்கன்பாளையம் சிவக்குமார், புளிய மரத்துபாளையம் வெள்ளியங்கிரி, வஞ்சி புரம் ஆனந்தன், வடவள்ளி ஊராட்சி மன்ற  உறுப்பினர் பரிமளா உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.