districts

img

பெருமாநல்லூர் ஆரம்ப சுகாதார நிலையத்தை அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்த சிபிஎம் கோரிக்கை

திருப்பூர்,  ஜூன் 27 – பெருமாநல்லூரில் செயல்பட்டு வரும் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்பசுகாதார நிலையத்தை திருப் பூர் வடக்கு வட்ட அரசு மருத்துவம னையாக தரம் உயர்த்த வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது. திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க் கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் வடக்கு ஒன்றியச் செயலாளர் ஆர். காளியப்பன், மாவட்டக்குழு உறுப் பினர் ஆ.சிகாமணி மற்றும் கே. பழனிசாமி உள்ளிட்டோர் ஆட்சியர் எஸ்.வினீத்திடம் நேரில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: அவிநாசி வட்டம் பெருமாநல் லூர் ஆரம்ப சுகாதாரநிலையத்தைச் சுற்றி பொங்குபாளையம்,  காளிபா ளையம், கணக்கம்பாளையம், ஈட்டி வீரம்பாளையம், பெருமாநல்லூர், வள்ளிபுரம், பட்டம்பாளையம், சொக்கனூர், தொரவலூர், மேற்கு பதி ஆகிய பத்து கிராம ஊராட்சிகள்  உள்ளன. இங்கு 2 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்ற னர். இப்பகுதி மக்கள் விபத்து மற் றும் அவசரசிகிச்சைக்கு இந்த  ஆரம்ப சுகாதார நிலையத்தைத்  தான் நாடி வருகின்றனர். அதே  சமயம் இந்த சுகாதார நிலையத்தில்  30 படுக்கை வசதிகள் இருந்தாலும்,  அது மகப்பேறு மருத்துவத்துக்கு மட்டுமே பயன் படுத்தும் நிலை உள்ளது. இதனால் இதர சிகிச் சைக்கு உள் நோயாளியாக தங்கி சிகிச்சை பெற வேண்டி யவர்களுக்கு படுக்கை வசதி இல்லை. அதேபோல் 24 மணி நேர சுகாதார நிலையமாக இருந்தாலும் மருத்துவர்கள் முழு நேரமும் இருப்பதில்லை. இதர நோய்கள் மற்றும் விபத்து சிகிச்சைக்கு போதுமான மருத்துவகட்டமைப்பு இல்லை. அத்துடன் மகப்பேறு அறுவை சிகிச் சைக்கும் இங்கு வசதி இல்லை. கோவை – சேலம் நான்கு வழிச் சாலையும் இம்மருத்துவமனை அருகாமையில் தான் செல்கிறது. இந்த சாலையில் நேரிடும் விபத்து களில் சிக்குவோருக்கு உடனடி அவசர சிகிச்சைக்குகூட அவிநாசி, திருப்பூர், ஈரோடு, கோவை நகரங்க ளுக்கு செல்ல வேண்டிய கட்டாய  நிலை உள்ளது. இதனால் உயிர்க் காக்கும் சிகிச்சை கிடைக்காமல் பல உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன. எனவே பெருமாநல்லூரில் செயல்படும் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதாரநிலையத்தை,  அனைத்து நோய்களுக்கும் சிகிச்சை அளிக்கத்தகுந்த, படுக்கை வசதி கொண்ட, 24 மணி நேரமும் மருத்துவர்கள் இருக்கக் கூடிய வகையில் வட்ட அரசு மருத்து வமனையாக தரம் உயர்த்த வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி கேட்டுக் கொண்டுள் ளது.