உதகை, ஜூன் 12- வனவிலங்கு பாதுகாப்பு மண்ட லம் அமைப்பது குறித்த உச்சநீதி மன்ற தீர்ப்பு, மக்களை பாதிக்காத வகையில் செயல்படுத்த வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து மார்க்சிஸ்ட் கட்சி யின் நீலகிரி மாவட்டக்குழு விடுத் துள்ள அறிக்கையில் தெரிவித்துள் ளதாவது, 2022 ஜூன் மாதம் ஆறாம் தேதி உச்சநீதிமன்றத்தில் பிறப்பிக் கப்பட்ட உத்தரவில் வனவிலங்கு பாதுகாப்பு மண்டலம் ஒரு கிலோ மீட்டர் அதிகப்படுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த உத்த ரவு நாடு முழுவதும் அமலாக்க ஒன்றிய, மாநில அரசுகள் நடவ டிக்கை மேற்கொள்ள வேண்டு மென வழிகாட்டியுள்ளது. உச்ச நீதி மன்றத்தின் இந்த உத்தரவு நீல கிரி மாவட்டத்திற்கு, குறிப்பாக கூட லூர் தொகுதிக்கும் பெரிய அள வில் பாதிப்பை ஏற்படுத்தும்.
ஏற்க னவே, இருக்கின்ற புலிகள் காப்ப கம், வனப் பாதுகாப்பு மண்டலம் ஆகியவற்றால் கூடலூர் தொகுதி மக்கள் துயரத்திற்கு உள்ளாகியுள் ளனர். மின்இணைப்பு, வளர்ச்சி பணி கள், கட்டுமானப் பணிகள் உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு எட்டப்ப டாமல், மக்களின் வாழ்க்கைத் தரத்தை பாதுகாக்க எந்த உத்தர வாதமும் இல்லாத நிலை உள் ளது. இந்நிலையில், உச்ச நீதிமன்றத் தின் உத்தரவு மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள் ளது. மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க தமிழக அரசு உடன டியாக இந்த பிரச்சனையில் தலை யிட வேண்டும். கூடலூர் போராட்டக் களமாக மாறாமல் சுமூகமான தீர்வு ஏற்படுத்த வேண்டிய பொறுப்பு நாடாளுமன்ற, சட்டமன்ற பிரதிநிதி களுக்கும், தமிழக அரசுக்கும் உள் ளதை மார்க்சிஸ்ட் கட்சி சுட்டிக் காட்ட விரும்புகிறது. வனவிலங்கு பாதுகாப்பு மண்டலம் விஸ்தரிப்பு மக்களுக்கு பாதிப்பில்லாமல் நடவ டிக்கை எடுக்க வேண்டிய பொறுப்பு தமிழக அரசுக்கு உள்ளது. மக்கள் குடியிருப்பு பகுதியில் விஸ்தரிப்பு இல்லாமல் மற்ற பகுதியில் நடை முறைப்படுத்தும் தன்மையில் அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மக்களின் குடியிருப்பு மற்றும் வாழ்வாதாரத்தை பாது காக்க தமிழக அரசு உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டும். மக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படமால் அரசு நடவ டிக்கை மேற்கொள்ள வேண்டு மென தெரிவிக்கப்பட்டுள்ளது.